கவின் மீது காதலில் விழுந்தாரா லாஸ்லியா.! ரசிகர்கள் ஷாக்.!

0
2942
Losliya
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் கவின் தான் தற்போது ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் மீது காதல் கொண்டிருப்பதை கவினிடம் நேரடியாகவே கூறி இருந்தார் அபிராமி. ஆனால், கவினோ நாம் இருவரும் நண்பர்களாக பழகி கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதேபோல அபிராமியிடம் மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா ஆகிய அனைவரிடமும் கவின் ஜொள்ளு விட்டுக் கொண்டுதான் வருகிறார். அது நிகழ்ச்சி பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிகிறது.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில நாட்களாகவே கவின் சாட்சியிடம் தான் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அதே போல லாஸ்லியாவிடமும் ஜொள்ளுவிட்டு திரிந்து வருகிறார். ஆனால், லாஸ்லியவோ கவினை அண்ணன் என்று தான் கூறிவந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

இதையும் பாருங்க : வனிதாவை சேர்த்து சாக்க்ஷியையும் காப்பற்றிய பிக் பாஸ்.! அடுத்த வாரமும் வனிதா காப்பற்றபடலாம்.! 

- Advertisement -

கடந்த சில நாட்களாக இரவர்கள் இருவருக்கு இடையே கடந்த சில நாட்களாக ஒருவிதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கொலைகாரன் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது. இதில் வனிதா மற்றும் முகன் கொலைகாரரர்களாக சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இதனால் கவின் மற்றும் மீரா கொலையாளி யார் என்று விசாரிக்கும் காவல் அதிகாரிகளாக டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது லாஸ்லியாவை விசாரித்த கவின், நீ தானே இந்த கொலையை செய்தாய் என்றதற்கு ” நான் யாரையும் கொலை செய்ய மாட்டேன் எனக்கு அன்பு காண்பித்து தான் பழக்கம் ‘ என்று லாஸ்லியா சொன்னதும், அன்பு கொடுத்தீங்க அது எனக்கு தெரியும் என்று கூறினார் கவின். அவர் சொன்னதை விதம் ‘நீ என் மீது தான் அன்பு வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்’ என்பது போல தான் இருந்தது.

-விளம்பரம்-

இப்படி கவின், லாஸ்லியாவிடம் விசாரித்துக்கொண்டிருக்கும் போது இடையில் மீரா ஏதோ பேச, நான் தான் அவரிடம் (லாஸ்லியா) பீலிங்ஸ் செய்து கொண்டிருக்கிறேன் நீ கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா விசாரி, என்னால் அவரிடம் ஸ்ட்ரிக்ட்டா விசாரி என்றார் கவின்.

அதன் பின்னர் மீரா, லாஸ்லியாவிடம் ‘அப்போ உங்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை’ என்று கேட்டதற்கு முதலில் இல்லை என்று சொன்னார் பின்னர் கவனின் கண்களை பார்த்து இருக்கு என்றார். லாஸ்லியா சொன்னது தன்னைத்தான் என்று புரிந்து கொண்டார் கவின்.

இந்த விசாரணையை பார்க்கும் போது லாஸ்லியா கவின் மீது காதலில் விழுந்தது போல தான் தோன்றியது. இதற்கு பின்னர் சிறைக்கு யார் செல்வது என்று மிகப்பெரிய பேச்சு வார்த்தை போய்கொண்டிருந்த போது கவினை சிறைக்கு செல்லும்படி வனிதா கூறினார்.

அதன் பின்னர் நான் செல்கிறேன் என்று லாஸ்லியா கூறிய போது அதனை யாரும் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த லாஸ்லியா பாத் ரூமில் கவினின் கையை பிடித்து இனி என்னுடன் பேசாதே கவின் என்று கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழுததற்கு முக்கிய காரணமே கவின் பிக் பாஸ் சிறைக்கு செல்கிறார் என்பதால் தான். இதுநாள் வரை கவினை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாதா லாஸ்லியா நேற்று நடந்ததை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் கவின் மீது காதலில் விழுந்துவிட்டாரா என்ற எண்ணம் தான் தோன்றியது.

Advertisement