படபிடிப்பின் போது மணிரத்னத்தை அவமதித்தாரா விஜய் சேதுபதி ? இது என்ன அடுத்த சர்ச்சை.

0
1872
vijaysethu
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. தனுஷின் ‘புதுப்பேட்டை’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் மிக சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற படத்தில் தான் விஜய் சேதுபதி முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ என அடுத்தடுத்து மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்தார். இம்மூன்று படங்களுமே அவரின் நடிப்புக்கு செம லைக்ஸ் போட வைத்தது.

- Advertisement -

அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. ‘சூது கவ்வும்’ படத்துக்கு பிறகு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், நானும் ரௌடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம், 96, பேட்ட, சூப்பர் டீலக்ஸ்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ‘மக்கள் செல்வன்’ ஆனார் விஜய் சேதுபதி. சமீபத்தில் தான் விஜய் சேதுபதி இந்து கடவுளை பற்றி தவறாக பேசிவிட்டார் என்ற ஒரு சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் மணிரத்னம் நடித்து காட்டுவாராம், அதன்படி தான் எல்லா நடிகர்களும் நடிப்பார்களாம். ஆனால், விஜய் சேதுபதி மட்டும் தன் பாணியில் தானே நடித்து கொள்கிறேன், எனக்கு நடித்து காட்ட வேண்டாம் என்று மணிரத்னமிடம் சொல்லி விட்டார் என்றும் இதனால் மணிரத்னம் கொஞ்சம் வருத்தப்பட்டார் என்று படப்பிடிப்பில் வேலை பார்த்த ஒருவர் கூறியதாக பிரபல சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை இயக்கப்போவது கமல் ஹாசன் தான், அவரின் பேச்சை கேட்டு நடிப்பாரா விஜய் சேதுபதி? என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

-விளம்பரம்-

இப்போது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில், முன்னணி நடிகரும்’, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்திருந்தார். அப்போது, அவர் விஜய் சேதுபதி கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று தான் பெயர் வைத்திருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து கமல் இயக்கி, நடிக்கவிருந்த ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தான் நடிக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

Advertisement