நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி நடிக்கிறேன் – கிழக்கு வாசல் சீரியலில் இணைந்த நடிகர் தினேஷ்

0
854
Dinesh
- Advertisement -

கிழக்கு வாசல் சீரியலில் ரக்ஷிதாவின் கணவர் நடிகர் தினேஷ் இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

இந்த கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியானது. இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பே இந்த தொடரில் இருந்து சஞ்சீவ் நீக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

தற்போது அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சஞ்சீவ் கூறியது, இந்த சீரியலின் பூஜையில் கலந்து கொண்டது உண்மைதான். ஷூட்டிங் தொடங்கி சில காட்சிகளில் நடிக்க செய்தேன். ஆனால், இப்போது நான் இந்த சீரியலில் இல்லை. நீங்க இந்த சீரியலில் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

ஆனால், அதற்கான காரணத்தை நான் இப்போது மீடியா முன்பு விளக்கமாக பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் தினேஷ் இணைந்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்கிறார். அதில் அவர் கேங்ஸ்டர் சிவா ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தினேஷ் கூறியது, கிழக்கு வாசல் சீரியலில் கலந்து கொள்வதில் நான் ஆவலாக உள்ளேன்.

-விளம்பரம்-

நீண்ட நாட்களுக்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் எனது இரண்டு சீரியல்களிலும் நான் பாசிட்டிவாக தான் நடித்தேன். தற்போது நெகட்டிவாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் வழங்கி அவர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். என்னுடைய புது பயணத்தில் அவர்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட மகான் என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் தினேஷ் கோபாலசாமி சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து இவர் புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம் தொடரில் நடித்து இருக்கிறார்.

Advertisement