ஜல்லிக்கட்டு வீரர்கள் வைக்கும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – முதல்வருக்கு அமீர் கடிதம்.

0
423
- Advertisement -

ஜல்லிக்கட்டு வீரர்கள் வைத்து வரும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இயக்குனர் அமீர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதி இருந்தது. இதனை அடுத்து இளைஞர்கள் உட்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மேலும், பல ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களுக்கு மற்ற விளையாட்டு துறைகளில் வேலை வாய்ப்பு இருப்பது போல ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேணும் என்று நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் முன்வைக்கும் தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குநர் அமீர் கடிதம் வாயிலாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அமீர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்’

-விளம்பரம்-

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன். “தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement