பெர்பெக்ஷன் என்ற பெயரில் ஸ்பாட்டில் பாலா செய்த செயல் – டிராப் ஆகிறதா சூர்யா – பாலா படம்.

0
347
bala
- Advertisement -

சூர்யா- பாலா கூட்டணியில் உருவாகி வந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக கூறப்படும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

இதையும் பாருங்க : தனது இரு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் பாண்டியராஜன் எடுத்த அழகான புகைப்படம் இதோ.

சூர்யா– பாலா கூட்டணி படங்கள்:

இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது. பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா– பாலா கூட்டணி:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் போடப்பட்டது. அப்படியே படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்தது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்தது.

சூர்யா– பாலா படத்தின் படப்பிடிப்பு:

இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்ததால் தான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சோசியல் மீடியாவில் வதந்திகள் கிளம்பி இருக்கிறது. இப்படி செய்திகள் பரவி வந்த நிலையில் சூர்யா- பாலா படம் டிராப் ஆகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சூர்யாவின் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியிருப்பது, இது தவறான தகவல். முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சில வாரங்கள் நடந்தது.

சூர்யா- பாலா ட்ராப் குறித்த தகவல்:

சூர்யா உட்பட அத்தனை நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் இருந்தது. ஆனால், மிகக் குறைவான சீன்களே இதுவரை படமாக்கப்பட்டது. ஸ்பாட்டில் பெர்பெக்சன் என்ற பெயரில் ஒரே சாட்டையை பாலம் மீண்டும் மீண்டும் எடுத்து வந்திருக்கிறார். மறுநாளும் முதல்நாள் எடுத்த சீன்களுக்கான ஷாட்களை படமாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த படம் டிராப் ஆகவில்லை. ஸ்கிரிப்டை நன்கு செதுக்கிய பின் மீண்டும் இந்த படப்பிடிப்பு துவங்க படலாம் என்று சொல்கிறார்கள். அதேபோல செய்திகளில் வந்தது போல படத்தின் பட்ஜெட் எதுவும் அதிகமாகவில்லை. இதுவரை சில கோடிகள் மட்டும் செலவு செய்து இருக்கின்றனர் என்கிறார்கள்.

Advertisement