நடிகை அஞ்சலி விசயத்தில் அடிக்கடி அடிபட்ட பெயர் களஞ்சியம். தமிழ்த்திரையுலகில் இயக்குனராக வலம் வரும் இவர் தற்போது முந்திரிக்காடு என்கிற ஒரு படத்தையும் இயக்கி வருகின்றார்.
தமிழ்தேசியம் பேசும் இவர், கட்சி ஒன்றையும் நடத்திவருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது தனது சர்ச்சையான முன்னனி நடிகர்களான ரஜினி,கமல்,அஜீத்,விஜய் என அனைவரையும் வம்பிழுத்துள்ளார்.
பிற மாநிலத்தை சேர்ந்த நடிகர்களான அஜித், ரஜினி, அர்ஜுன், ஆர்யா போன்ற நடிகர்களை கொண்டாட கூடாது, விரட்டியடிக்க வேண்டும் என்பது போல பேசிய அவர் இளைய தளபதி விஜயையும் விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையில் போர் நடந்து ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது விஜய் என்ன செய்தார் ! அவருக்கு எதற்கு பாலபிஷேகம்??
இதை எதிர்த்த பொதுமக்களையும் தாக்குகிறீர்கள் என அவரது ரசிகர்களையும் ஒரு பிடி பிடித்துள்ளார்.
இவருடைய இந்த தாக்குதல் திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே களஞ்சியம் தான் ஆர்கே.நகர் இடைத்தேர்தலின்போது நாம்தமிழர் கட்சி வேட்பாளருக்கு சீமானுடன் சேர்ந்து தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.