இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சென்றாயனுக்கு, `வந்து பொழப்பப் பாரு’ என அறிவுறுத்தியிருக்கிறார், இயக்குநர் நவீன்.
வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.
பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள். #Sentrayan#BigBoss2— Naveen.M (@NaveenFilmmaker) September 9, 2018
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் டேனி வெளியேற, இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் ஜனனி ஐயர், சென்றாயன், மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இவர்களில், ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘பிக் பாஸ்’ வழக்கம்போல ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினார். குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேறினார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சென்றாயனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், இயக்குநர் நவீன். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், “வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்பப் பாரு. பிக் பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு, “மீண்டும் ஒருமுறை சென்ட்ராயனுக்காக தமிழன்டா பாடல்” என்று குறிப்பிட்டு தமிழன்டா பாடலை இணைத்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.