சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சிம்ரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் நடிகை சிம்ரன் அந்த படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து வந்தாராம். ஆனால், அப்போது தான் சிம்ரன் கற்பாக இருக்கிறார் என்ற விடயம் தெரியவர அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். சிம்ரனின் நிலைமையை புரிந்து கொண்டு இயக்குனர் பி வாசுவும் சிம்ரன் படத்தில் இருந்து விலக சம்மதித்துவிட்டாராம்.
சிம்ரன் விஜய், அஜித், கமல் என்று அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனால், ரஜினியுடன் நடிக்காதது தான் ஒரு குறையாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது நடிகை சிம்ரன் , கார்த்திக் சுப்புராஜ் இயக்கித்தில் ரஜினி நடித்து வரும் “பேட்ட ” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரஜினி மற்றும் பிரபு இணைந்து நடித்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேட்டி போன்றவை பங்கேற்ற பி வாசு கூறுகையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கெனவே கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்தப் படம் அங்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இந்தப் படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி ஒரு தமிழ் ஹீரோவிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். முதற்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா என்று பி வாசு கூறவில்லை. ஆகையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறாரா என்பது தெரியவில்லை