கர்நாடகவிற்கு சென்று காவேரி பிரச்சனையை பற்றி பேச தமிழ்நாட்டில் தகுதியான நபர் அவர் தான் – பேரரசு சொன்ன யோசனை.

0
1215
- Advertisement -

காவேரி பிரச்சனை குறித்து இவர் அங்கு சென்றால் தான் அது சரியாக இருக்கும் என்று பேரரசு ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இந்திய பாகிஸ்தான் பிரச்சினை போல தற்போது தமிழகமும் கர்நாடகமும் இருந்து வருகிறது. காவிரி நதிநீர் தமிழகத்திற்கு அளிப்பதற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அது மட்டுமல்லாமல் இங்கிருந்து கர்நாடகா பெங்களூர் செல்லும் தமிழக வாகனங்களையும் ஓட்டுனர்களையும் தாக்கி வருகிறது. இமேலும் தமிழகத்திற்கு எதிராக அங்கு ஒரு போராட்டத்தையும் கன்னட அமைப்புகள் நடத்தி வருகிறது.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் சித்தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாதியில் வந்த கன்னட அமைப்புகள் தமிழ் நடிகர் எப்படி சந்திக்கலாம் என்றும் அவரை மிரட்டி வெளியே அனுப்பினார். அதற்கு கர்நாடகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கூறினார். கர்நாடகாவில் சித்தார்த் வெளியேற்றியது பற்றி இங்கு உள்ள தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கமம் அல்லது தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டனம் அறிக்கை கூட வெளியிடவில்லை.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு ஒரு அறிக்கையை விட்டார் கூட ஆனாலும் இது இந்த சித்தா படத்தின் தொடர்பாக அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக பேசக்கூடாது என்றும் கர்நாடகவிற்கு தான் ஆதரவாக பேச வேண்டும் என்றும் அன்புள்ள கனடா அமைப்புகள் ரஜினிகாந்துக்கு மிரட்டல்களை அளித்து வருகிறது. சினிமாவில் மட்டுமே விவசாயம் காப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வரும் நடிகர்களை குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இவர்களுடைய வீரம் எல்லாம் அனைத்தும் சினிமாவில் மட்டுமே என்றும் பலர் இவர்களை விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் திரைப்படத்தை அங்கு கர்நாடகாவில் வெளியிட முடியாது என்று இங்கு உள்ள தமிழக நடிகர்கள் மௌனம் காத்து அறிகின்றனர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமே 75 கோடி வசூலித்து வந்தது எனது மற்ற நடிகர்களின் படம் கர்நாடகாவில் அதிக அளவில் ஓடும் என்பதால் கர்நாடகாவிற்கு எதிராக யாரும் அறிக்கையையும் வாயையும் திறக்கவில்லை.

-விளம்பரம்-

அறிக்கை விட்ட பேரரசு :

கர்நாடகவிற்கு சென்று காவேரி பிரச்சனையை பற்றி பேச தமிழ்நாட்டில் தகுதியான நபர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் மட்டுமே!அங்கே காங்கிரஸ் ஆட்சி!இங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ்! தமிழக மக்களுக்காக அவரை தமிழக அரசு அவரை அனுப்பி வைக்கலாம்! என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார் யாரும் கருத்து தெரிவிக்க முன் வராத நிலையில் இவர் இது போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement