தமிழ்நாடு முழுவதும் இயக்குனர் ராஜமவுலி சுற்றுலா சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவன் முதன் முதலில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது மாவீரன் படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் நான் ஈ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான்.
பாகுபலி படம்:
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும்.
Wanted to do a road trip in central Tamilnadu for a long time. Thanks to my daughter who wanted to visit temples, we embarked upon it. Had been to Srirangam, Darasuram, Brihadeeswarar koil, Rameshwaram, Kanadukathan, Thoothukudi and Madurai in the last week of June . Could only… pic.twitter.com/rW52uVJGk2
— rajamouli ss (@ssrajamouli) July 11, 2023
RRR படம்:
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் ராஜமௌலிக்கு ஆர் ஆர் ஆர் படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ராஜமவுலி ஒரு வரலாற்று, புராணங்களை இந்த காலத்திற்கு ஏற்ப படங்களாக எடுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதுக்கேற்றவாறு தற்போது ராஜமவுலி அவர்கள் மகாபாரத கதையை 10 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜமௌலி டீவ்ட்:
இது ஒரு பக்கம் இருக்க, இவர் ஹாலிவுட், வெளிநாட்டு பயணம் என்று சுற்றிக் கொண்டிருந்தார். அது குறித்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலை தற்போது இவர் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமிக்க கோயில்களுக்கு சென்று இருக்கிறார். அந்த வகையில் கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி என பல கோயில்களுக்கு சென்று இருக்கிறார். பின் இது தொடர்பாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக சுற்றுலா பயணம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். என் மகள் கோயில்களுக்கு செல்ல விரும்பினார்.
சுற்றுலா பயணம் குறித்து சொன்னது:
அதனால் தமிழ்நாட்டு கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டோம். என் மகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை போன்ற பல இடங்களுக்கு சென்றோம். நேர்த்தியான கட்டிடக்கலை அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் பல ஆட்சியர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை எல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், சில நாட்களில் அவற்றை பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது. மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தின் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருக்கிறது. ஒரு வாரத்தில் மூன்று கிலோ எடை போட்டு விட்டேன். வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு இந்த தாயகம் சுற்றுப்பயணம் எனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் .