தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது.
இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து .
இதையும் பாருங்க : கவின் மீது காதலில் விழுந்தாரா லாஸ்லியா.! ரசிகர்கள் ஷாக்.!
இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது. பா ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவரது தந்தையை பெரும்பாலானோர் கடந்து இல்லை. இந்த நிலையில் பா ரஞ்சித்தின் தந்தை இன்று (ஜூலை 12) காலமாகியுள்ளார்.
ரஞ்சித்தின் தந்தையின் பெயர் பெயர் பாண்டுரங்கன். அவருக்கு 63 வயதாகிறது. பாண்டுரங்கன் கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு ரஞ்சித்தின் தந்தையின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளது. இதனால் ரஞ்சித்தின் தந்தை உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பட்டது. தந்தையை பிரிந்து வாடும் ரஞ்சித்துக்கு எண்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.