இயக்குனர் தங்கர் பச்சனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா.. சினிமாவில் வேற நடிக்க போறாராம்..

0
1843
thangar-bachan
- Advertisement -

சினிமா துறைக்கு வாரிசுகள் வந்து ஹீரோவாக இருப்பது இது ஒண்ணும் புதுசு இல்லையே. பல இயக்குனர்கள்,நடிகர்கள் தங்களுடைய மகன்களை சினிமா துறையில் சாதிக்க வைத்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் எஸ்.ஏ. சந்திர சேகரின் மகன் விஜய் இப்போது அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல டி ராஜேந்திரன் மகன் சிம்பு ,கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் என பலரும் தங்கள் வாரிசுகளை சினிமா உலகில் களமிறங்கினார்கள். இந்த வரிசையில் தற்போது பிரபலஇயக்குனரான தங்கர்பச்சானும் தன்னுடைய மகனை நடிக்க வைக்கிறார். தமிழ் சினிமா உலகில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர் பச்சான்.

-விளம்பரம்-
Image result for thangar bachan

மேலும், இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். தற்போது தங்கர் பச்சான் அவர்கள் புதிதாக இயக்கும் படத்தில் அவருடைய மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார். இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், தங்கர் பச்சான் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு படம் இயக்குவார்.

- Advertisement -

ஆனால், இவருடைய ‘களவாடிய பொழுதுகள்’ படம் பெரிய அளவு வெற்றியை தரவில்லை என்பதால் நீண்ட நாட்கள் சினிமா உலகில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது அவர் புதிதாக இயக்கும் படத்தில் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்த படத்தை பி.எஸ்.என். என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.இந்த படம் முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்காகவும், நகைச் சுவை நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கூறினார். இந்த படத்தில் மிலனா, அஸ்வினி என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.தரண் குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Image result for thangar bachan son

பிரபு தயாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களோடு முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் என பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு “டக்கு முக்கு டிக்கு தாளம்” என்ற தலைப்பையும் வைத்துள்ளார்கள். தலைப்பு கேட்கவே காமெடியாக இருக்கு இல்ல .அந்த அளவு படமும் நகைக்சுவையாக இருக்கும். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் சென்னை நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் படத்தில் காதல், ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை என பல அம்சங்கள் இருக்கும் என கூறியுள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் படபிடிப்பு முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், கூடிய விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்கள் படக்குழு.

Advertisement