கோலங்கள் தொடருக்கு பின் மீண்டும் நடிகராக களமிறங்கும் திருச்செல்வம் – எந்த தொடரில் தெரியுமா ?

0
2983
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் நடிகராக இயக்குனர் திருசெல்வம் களமிறங்கிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு தான் திருச்செல்வம் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் திருச்செல்வம்.

- Advertisement -

திருசெல்வம் இயக்கிய சீரியல்கள்:

இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

அதற்கு காரணம், இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட தொடர்.
தற்போது சீரியல் சூடு பிடித்து சென்று கொண்டிருக்கின்றது. அடுத்து என்ன நடக்கும்? என்று ஆர்வத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

தற்போது சீரியலில் பட்டம்மா பாட்டி கோமா நிலையில் இருக்கிறார். அருண் கௌதமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் தன் தங்கை திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுடைய எண்ணத்தை முறியடித்து ஆதிரை- அருணின் திருமணம் நடக்குமா? கரிகாலனின் நிலைமை என்ன? என்ற பல அதிரடித்திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இயக்குனர் சீரியலில் நடிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர்:

சீரியலில் ஜீவானந்தம் வருகைக்காக பலரும் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் திருச்செல்வம் சீரியலில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியலில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார். மேலும், இது குறித்து சீரியலுக்கு நெருக்கமான நபர் ஒருவர் கூறியிருப்பது, ஜீவானந்தம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தான் திருச்செல்வம் நடிக்கிறார். விரைவில் அவர் சீரியலில் வருவார். அவருடைய வருகை மூலம் பார்வையாளர்கள் நிகழ்ச்சியை அதிக சுவாரசியத்தோடு பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement