எதிர் நீச்சல் சீரியலில் இருந்து டாட்டா காட்ட போகும் திருச்செல்வம் – இனி சீரியலின் நிலைமை.

0
2702
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரம் முடிவடைய இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியின் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி கொண்டு இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடர் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல கமலேஷ், நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி திருமணம் செய்கிறார்கள். அவர்களால் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.

சீரியலின் கதை:

பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். அதோடு வலது புறம் கை செயலிழந்து விட்டது போல் குணசேகரன் நடிக்கிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் ஜீவானந்தம் :

மேலும், இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் திருச்செல்வம் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். இவர் ஏற்கனவே நிறைய சீரியல்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். இருந்தாலும், இந்த ஜீவானந்தம் ரோல் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்திருக்கிறது. தற்போது சீரியலில் ஜீவானந்தம் தன்னுடைய முன்னாள் காதலி ஈஸ்வரியை சந்தித்து பேசுகிறார். ஜீவானந்தம் யார் என்ற உண்மையும் ஈஸ்வரிக்கு தெரிய வருகிறது.

ஜீவானந்தம் ரோல் குறித்து சொன்னது:

இதனால் ஜீவானந்தம் மனசு மாறி சொத்தை ஈஸ்வரிடம் ஒப்படைப்பாரா? இல்லையா ?என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் , முதலில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தை சில நாட்கள் காண்பிக்கலாம் என்று தான் எடுத்தேன். இப்போது கதையின் முக்கியத்துவத்துக்காக ஜீவானந்தம் கதாபாத்திரம் பயணித்து வருகிறது. இனிவரும் நாட்களில் கதையின் போக்கு, ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்கும். ஆனால், அதுவும் அதிக நாட்கள் ஜீவானந்தம் ரோல் இருக்காது என்று கூறி இருக்கிறார்.

Advertisement