லோகேஷ்க்கு முன்பே விக்ரம் 2வை எடுக்க ஆசைப்பட்டுள்ள இயக்குனர் – இந்த வீடியோவ பாத்து தான் லோக்கி எடுத்துட்டாரோ.

0
679
vikram
- Advertisement -

விக்ரம் 2 படம் பிளான் இருப்பதாக வெங்கட்பிரபு அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
vikram

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல்.

கமல் கொடுத்த பரிசு:

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல். மேலும், இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெங்கட் பிரபு அளித்த பேட்டி:

காரணம், அடுத்த பக்கத்தில் சூர்யா-கமல் மோத போவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பே பேட்டியில் வெங்கட் பிரபுவிடம் கமலை வைத்து என்ன மாதிரி படம் எடுப்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு விக்ரம் போல் எடுப்பேன். அதோடு இரண்டாம் பாகமாக ஒரு இண்டியானா ஜோன்ஸ் போல் எடுப்பேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இதைப்பார்த்த ரசிகர்கள் வெங்கட்பிரபு அப்பவே இப்படி யோசித்தாரா! என்று ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

வெங்கட் பிரபு குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வெங்கட் பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்து கொண்டு இருந்தார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார்.

Advertisement