-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஒரு சில நடிகைங்க டைட்டா ட்ரெஸ் போட்டா கூட கேவலமா இருப்பாங்க, ஆனா நயன் நீச்சல் உடை போட்ட கூட – வர்ணித்த முக்கிய பிரபலம்

0
521
Nayanthara

நீச்சல் உடையில் கூட நயன்தாரா அழகாகத்தான் இருப்பார் என்று கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மூத்த மகள் ஆவார். இவருடைய தங்கை லலிதா குமாரியும் பிரபல நடிகையாக இருந்தவர் தான்.

-விளம்பரம்-

மேலும், டிஸ்கோ சாந்தி 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்தும், கவர்ச்சியாக நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதோடு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

டிஸ்கோ சாந்தி குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இவர் பாலிவுட்டிலும் நடித்து இருக்கிறார். இவர் சில்க் சுஸ்மிதாவுடன் இணைந்து சில படங்களில் நடனமாடி இருக்கிறார். அதோடு சில்க் ஸ்மிதா தயாரித்த சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இதனிடையே டிஸ்கோ சாந்தி, ஸ்ரீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்ரீஹரி 2013ம் ஆண்டில் இறந்துவிட்டார். இவரும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

discoshanthi

டிஸ்கோ சாந்தி அளித்த பேட்டி:

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் டிஸ்கோ சாந்தி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் நயன்தாரா குறித்து கூறியிருந்தது, உடை என்பது எந்த ஒரு வகையிலும் நடிகையை தவறான கண்ணோட்டத்தில் காட்டாது. உதாரணத்திற்கு, பில்லா படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் வந்திருப்பார். அதில் அவர் மிக அழகாகவும் இருப்பார். அவரை யாராவது வக்கிரமான எண்ணத்தோடு பார்த்தால் கூட முகம் சுளிக்கும் அளவிற்கு அவர் கவர்ச்சி இருக்காது.

-விளம்பரம்-

உடை குறித்து டிஸ்கோ சாந்தி சொன்னது:

ஆனால், ஒரு சிலர் உடல் முழுவதுமாக ஆடைகளை போர்த்திக் கொண்டு வந்தாலும் அந்த உடை இறுக்கமாக இருக்கும்போது பார்ப்பதற்கு கேவலமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

nayanthara

நயன் திரைப்பயணம்:

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த O2 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news