கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்ட செல்லம்மா சீரியல் நடிகர் – நண்பர்கள் சேர்ந்து நடத்திய வளைகாப்பு. நெகிழ்ச்சி அடைந்த திவ்யா.

0
632
arnav
- Advertisement -

சின்னத்திரை நடிகர் அர்னவ்வை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகி இருந்த திவ்யாவை கர்ப்பமான பின்னர் அர்னவ் கைவிட்ட நிலையில் தற்போது திவ்யாவிற்கு அவரது நண்பர்கள் சேர்ந்து வளைகாப்பை நடத்தி இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். சமீபத்தில் தான் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

மேலும், அர்னவ் செல்லமா சீரியல் நடிகை உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை வெளிக்காட்டினார் திவ்யா. இது குறித்து அர்னவ் விளக்கமளித்த போது நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து கொண்டிருந்தோம் அவர் விவாகரத்து ஆனவர் என்பது தெரியும். ஆனால், திருமணம் செய்யப் போகும் கடைசி நிமிடத்தில் தான் தனக்கு விவாகரத்து ஆனதையே அவர் சொன்னார். நான் ஐந்து வருடங்கள் காதலித்து விட்டோமே என்று இதையெல்லாம் சகித்துக் கொண்டேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

எந்த நோக்கில் அவர் செய்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்று இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள்.இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து அர்னவிற்கு சம்மனும் அனுப்பி இருந்தார்கள். ஆனால், அர்னவ் போலீஸ் இடம் ஆஜராகாமல் இருந்தார்.

இந்த நிலையில் ஷூட்டிங் சென்ற அர்னவை போலீசார் கைது செய்தனர்..இதை தொடர்ந்து அர்னவ் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யா ஆதரவின்றி தவித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து திவ்யாவிற்கு வளைகாப்பை நடத்தி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement