கோர்ட்ல அத சொல்லி தான் ஜாமீன் வாங்கினார், ஆனா அத செய்யல. இன்னும் அந்த பொண்ணு கூட தான் சுத்திட்டு இருக்கார் – திவ்யா புலம்பல்.

0
490
arnav
- Advertisement -

சின்னத்திரை நடிகையான திவ்யா மற்றும் அர்னவ் விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக இருந்தது. சமீபத்தில் தான் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

மேலும், அர்னவ் செல்லமா சீரியல் நடிகை உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை வெளிக்காட்டினார் திவ்யா. இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் ஷூட்டிங் சென்ற அர்னவை போலீசார் கைது செய்தனர். 15 நாட்கள் சிறையில் இருந்த அர்னவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த அர்னவ்விடம் திவ்யாவை தொந்தரவு செய்யக்கூடாது என்ற பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக வசித்தது வருகின்றனர். கர்ப்பமாகி ஐந்து மாதங்களான திவ்யாவிற்க்கு அவர் நடித்துவரும் “மகராசி” பட சீரியலின் படப்பிடிப்பு தளத்திலேயே வளைகாப்பு நடைபெற்றது. இப்படியிருக்கும் போது பிரபல செய்தி ஊடகம் நடிகை திவ்யாவிடம் பேட்டியெடுத்தது. திவ்யா அந்த பேட்டியில் என் வளைகாப்பின் போது என்னுடன் நடித்த பல பிரபலங்கள் வந்திருந்தனர் அர்னவ் வரவில்லை. ஆனால் ஜாமின் கேட்கும் போது என் மனைவியை பார்த்து கொள்வதாக கேட்டுத்தான் வந்திருக்கிறார். ஆனால் தொலைபேசியின் வாயிலாகக் கூட ஒன்றும் கேட்கவில்லை.

-விளம்பரம்-

இந்நிலையில் என்னை மேலும் கஷ்டப்படுத்தும்படி முன்பு தொடர்பு இருந்த பெண்ணுடன்தான் இப்பவும் சுத்திட்டு இருக்கிறார். அதோடு வீட்டிற்கு வாங்கிய இ.எம்.ஐ கட்ட முடியாதுனு சொல்லிருக்காரு. நாங்க ஒன்றாக இருந்தபோது வசித்த வீடு என்னுடைய நகையை வைத்துதான் வாங்கினோம். அதற்கு சாட்ச்சியாக கூட அவருடைய அம்மாதான் இருந்தார். மேலும் அந்த வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த வரைக்கும் நான் தான் இ.எம்.ஐ காட்டினேன்.

ஆனால் இப்போது பிரிந்த பிறகு வங்கியிலிருந்து தொலைபேசியின் மூலம் அர்னவ்வை இ.எம்.ஐ கட்ட சொல்லி கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர் நான் இப்போது அந்த வீட்டில் இல்லை, அந்த வீட்டில் இருப்பவரிடம் கேளுங்கள், இல்லையென்றால் வீட்டை வங்கி எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார். நான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இப்படியிருக்கும் போது வங்கி என்னை அழைத்து இ.எம்.ஐ கட்டவில்லை என்றால் வீட்டை எடுத்துகொள்ளுங்கள் என்று உங்களுடைய கணவர் சொன்னார் எனக் கூறினார். இது எனக்கு மேலும் மனவேதனையை உருவாக்கியுள்ளது என்று கூறினார் சீரியல் நடிகை திவ்யா.

Advertisement