குழந்தை பெத்துக்க நல்லவனா இருந்தா போதும் – ஷர்மிகாவின் பேச்சால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
454
Sharmika
- Advertisement -

பாஜக சிறுபான்மையின அணி தலைவரான டெய்சி சரணின் மகள் தான் ஷர்மிகா சரண். இவர் டெய்சி ஹாஸ்பிடல் என்ற ஓரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் மருத்துவ குறிப்பு என்ற பெயரில் வரும் 100 ஆண்டுகளில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அறிய வகை மருத்துவத்தை அவருடைய பார்வையாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், மலையடி சாத்திரம், ஹோமியோ பதி, அம்பிகாபதி, அமராவதி என எல்லாவற்றிற்கும் வைத்தியம் பார்க்கும் இவரின் திறமைக்கு எல்லையே கிடையாது.

-விளம்பரம்-

அவர் சொல்வதெல்லாம் சேர்த்து புத்தக அருங்கட்சியாகமே ஆரம்பிக்கலாம் அந்த அளவிற்கும் உருட்டாக உருட்டி வருகிறார். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் சரிமாணமாகாது என்றும் அது நம்முடைய DNAவிலே இருக்கிறது என்று மாட்டாய் சாப்பிட்டால் நம்முடைய உடலில் என்ன நடக்கும் என்று DNA வரை சென்று ஆராய்ச்சி செய்து வெளிநாட்டு மருத்துவர்க்ளுக்கே டஃப் கொடுத்திருக்கிறார் நம்ம டாக்டர்.

- Advertisement -

அதே போல 10 நாட்கள் பட்டினி இருந்து குறைக்கிற உடல் எடை 11 வது நாள் ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை வந்துவிடும் என்று சூர்யாவை போல “ஓங்கி அடிச்ச ஒன்றை டன் வெய்ட்டுடா” என்று பேசியிருக்கிறார் நம்ம சித்த மருத்துவர் ஷர்மிகா. அதிலும் இவங்க சொன்னதுல ஹைலைட் என்னவென்றால் குழந்தை பெத்துகொள்ள வேண்டுமென்றால் புருஷன் நல்லவனா இருந்த போதும் என்றும் மற்ற வற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் பேசியதை பாரத்தால் கடவுளுக்கே கோவம் வரும்.

இதென்ன பிரமாதம் இது விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்பதை போல சளி புடிச்சா சானியா கரச்சி குளிங்க, இருமல் வந்தா இஷ்ட தெய்வத்தை கும்பிடுங்கள், வெள்ளையகனுனா வெண்ணெயை சாப்பிடுங்க என்று ரத்தம், நாடி , நிரம்பி, சத, மூளைன்னு எல்லாவற்றிலும் உருட்டு ஊறிய ஒருவரால் மட்டுமே இவரை போல சொல்ல முடியும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இப்படி ஒரு டாக்டருக்கு சிலை வைத்து, ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறதுல என்ன தப்பு இருக்கு.

-விளம்பரம்-

ஒரு தடவ நம்ம டாக்டர் சொல்லும் போது ராணுவ வீரர்கள் மாதிரி டாக்டர்களும் நாட்டுக்காக சேவை செய்கிறோம் என்று சொல்லி பீல் பண்ணிருந்தாங்க நம்ம டாக்டர். ஆனா அது உண்மையான டாக்டருக்கு மட்டும்தான் இவங்க டாக்டர் கிடையாது அதை விட அஷ்டமா சித்திகளை உள்அடக்கிய ஒரு மகான். போதி தர்மருக்கே மருத்துவம் சொல்லி கொடுத்த இவங்க கிட்ட எந்த காய், கனி என்ன பலன் என்று கேட்டால் டக்குனு சொல்லுவாங்க, ஆனால் எனக்கு பிரச்னை எதாவது மருந்து கொடுங்கன்னு மட்டும் அவங்க கிட்ட போய் நிக்காதிங்க போன அப்படியே போக வேண்டியதுதா.

Advertisement