கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான டீவ்ட் – திட்டி தீர்த்த ரசிகர்களால் பதிவை நீக்கிய திரௌபதி பட இயக்குனர்

0
531
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் உலகில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி, ருத்ரதாண்டவம். இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மோகன் ஜி தான் இயக்கி வரும் படம் பகாசூரன். இந்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார்.

- Advertisement -

பகாசூரன் படம்:

ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பகாசுரன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் அவர்கள் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம்:

அதாவது, தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான்.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார்.

-விளம்பரம்-

மாணவி மரணத்தில் மர்மம்:

அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது.

மோகன் பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் மோகன் அவர்கள் தனது டுவிட்டரில், கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் முதல் முறையாக நடந்த சம்பவம் அல்ல. இன்னும் பல சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளது. மூன்று மாதம் காத்திருங்கள் என்று தன்னுடைய படத்தினுடைய பகாசூரன் டைட்டிலை பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி நேரத்தில் கூட உங்களுடைய படத்தின் புரமோஷன் பண்றீங்களா? உங்களுக்கே நியாயமா? என்றெல்லாம் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். உடனே இயக்குனர் மோகன் பதிவை நீக்கி இருக்கிறார்.

Advertisement