24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ‘சுயம்வரம்’ படத்தில் 3 நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ள பிரபலம்.

0
2904
suyamvaram
- Advertisement -

பல நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் டப்பிக் வாய்ஸ் கொடுத்து சாதனை செய்த பிரபலத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வரலாற்றிலேயே 14 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கியபடம் சுயம்வரம். இந்தப்படம் 1999 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்தது. இந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் 23 மணிநேரம் 58 நிமிடத்தில் எடுக்கப்பட்டது. இதனால் இந்த படம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர். ஒரு சில இயக்குநர்கள் இணைந்து படம் இயக்கும்போதே பல பிரச்சனைகள் வரும். இந்த நிலையில் 14 இயக்குநர்கள் இணைந்து ஒரு படத்தை இயக்கி இருந்தது மிகப் பெரிய சாதனை என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநரும் தங்களுடைய வேலை, எந்த கதாபாத்திரத்தை வைத்து எந்த காட்சிகளை எடுக்கவேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு செய்தார்கள்.

- Advertisement -

அதனால் இந்த படத்தை ஒரே நாளில் திட்டமிட்டபடி எடுத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் பல பேருக்கு ஒரே நபர் டப்பிங் கொடுத்து பிரபலமாகியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனுராதா ரம்பா, குஷ்பூ, ப்ரீத்தா என்று 3 பேருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து இருந்தார்.

இதுவரை தமிழ் சினிமா உலகிலேயே எந்த ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் 3 நடிகைகளுக்கு டப்பிங் செய்ததில்லை. ஆனால், முதல்முறையாக அனுராதா அதை செய்து சாதனை படைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் ஒவ்வொரு கதாநாயகிகளுக்கும் ஏற்றபடி அனுராதா தன்னுடைய குரலை மாற்றி டப்பிங் கொடுத்து இருந்தார். அப்போது ஒரே சீனில் இரண்டு கதாநாயகிகளுக்கு மாறி மாறி டப்பிங் கொடுத்து இருந்தார். இவருடைய சாதனை குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். தற்போது இவருடைய சாதனை குறித்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement