நீங்க beef சாப்புடுவீங்களா ? நிருபரின் கேள்விக்கு துஷாரா விஜயன் கொடுத்து பதிலடி.

0
539
Dushara
- Advertisement -

மாட்டு இறைச்சி கறி குறித்து நட்சத்திரம் நகர்கிறது பட கதாநாயகி துஷாரா விஜயன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் கலையரசன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வருகிறார். பின் அவர் அங்கு ஒரு நாடக குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது குழுவில் உள்ள நபர்களுடன் கரையரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருந்தாலும், கரையரசன் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் நாடக குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடக்கிறது.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம்:

இதற்கிடையே ரெனே- இனியன் இருவரும் காதலித்து வருகிறார்கள். திடீரென்று அவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகிறது. இப்படி பல கிளை கதைகளாக நட்சத்திரம் நகர்கிறது படம் சென்று கொண்டிருக்கின்றது. இறுதியில் கரையரசனின் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா? கரையரசனுக்கு என்ன ஆனது? ரெனே-இனியன் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் காதலுக்கு பாலின வேதங்கள், ஜாதி மதங்கள், எல்லாம் கிடையாது என்பதை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்தின் கதை:

மேலும், பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் துஷாரா விஜயன். இதற்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட துஷாரா அதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

துஷாரா விஜயன் அளித்த பேட்டி:

குறிப்பாக, இந்த படத்தின் ஒரு நட்சத்திரமாகவே அவர் மின்னுகிறார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இளையராஜா பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல புத்தர் சிலை, மாட்டுக்கறி, சாதி அரசியல், காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என பா ரஞ்சித்தின் அரசியலும் அதற்கான வசனங்களும் கவனத்தை பெறுகிறது. இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்திற்காக ஏழு வருடங்கள் காத்திருந்தேன். ரொம்ப மன நிறைவாக சந்தோஷமாக இருக்கிறேன்.

மாட்டு இறைச்சி குறித்து சொன்னது:

இந்த அளவிற்கு என்னை மக்கள் மத்தியில் பிரபலமாகியதற்கு ரஞ்சித் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.
படத்தில் பீப் கறி பத்தி பேசியிருப்பது பொதுவான விஷயம்தான். அதுவும் ஒரு வகை உணவு தானே. சிக்கன் மாதிரி அதுவும் ஒரு வகையான உணவு. நான் எல்லாம் சாப்பிடுவேன். தயிர் சாதம் பிடிப்பவர்கள் தயிர் சாதம் சாப்பிடலாம். பீப் சாப்பிடுபவர்கள் பீப் சாப்பிடலாம் என்று தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றும் சர்ச்சையாக கூடிய அளவிற்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement