நட்சத்திரம் நகர்கிறது நாயகியிடம் Bulb வாங்கிய பயில்வான் ரங்கநாதன் – வைரலாகும் வீடியோ.

0
492
dushara
- Advertisement -

இன்று வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது இந்த படத்தின் ஹீரோயின் துஷாரா செய்தியாளர் சந்திப்பில் கூறியது மற்றும் அவரிடம் கேள்வி கேட்டு அசிங்கப்பட்டார் நடிகர் பயில்வான். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஓருவராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரீலிஸ் ஆகி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம் :

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. இருந்தாலும் இவ்வளவு அருமையான படத்தை திரையில் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் தங்கள் வேதனைகளை தெரிவித்தனர். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து இன்று திரைக்கு வந்தது.

இந்த முறை புதிய குழுவுடன் களமிறங்கிய பா.ரஞ்சித் :

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் அசோக் செல்வன் எனப் பலர் நடித்து இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். இந்த முறை பா.ரஞ்சித் புதிய குழுவுடன் களமிறங்கி இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்புடன் இருந்தது இன்று படம் வெளிவந்து அனைவரின் எதிர்பார்பையும் பூர்த்தி செய்தது.

-விளம்பரம்-

பல்பு வாங்கிய பயில்வான் :

செய்தியாளர்களே சந்திப்பில் துஷாராவிடம் பயில்வான் நட்சத்திரம் நகர்கிறது வேறு நட்சத்திரம் விழுகிறது வேறு நீங்கள் நட்சத்திரம் பார்த்து இருக்கிறீர்களா என்று தசராவை நோக்கி நடிகர் பயில்வான் கேள்விகளை போட்டு தாக்கிக் கொண்டு இருந்தார். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தயங்கிக் கொண்டிருந்த துஷாராவை காப்பாற்று நோக்கில் நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவில் இருந்த ஒருவர் இந்த கேள்விகளை நீங்கள் டைரக்டர் இடம் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டார். இதைக் கேட்ட பயில்வான் கடுப்பாகி அதை நீங்கள் சொல்லக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே துஷாரா நன்றி சார் என்று நடையை கட்டி விட்டார். நூதன முறையில் கேள்வி கேட்பதாக நினைத்து பல்பு வாங்கினார் பயில்வான்.

துஷாரா கொடுத்த பேட்டி :

மேலும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா இந்த படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நான் மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மேலும் படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள் என்றும் கூறினார். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு மிகவும் நன்றி எனவும். பா.ரஞ்சித்தின் இது இரண்டாவது படமாக இருந்தாலும். என் வாழ்வில் எனக்கு ஒரு முக்கியமான படம் இது நான் சொல்கிறேன் மனம் நிறைந்து நான் இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்றும் எனக்கு தெரியும் நீங்கள் மாரியம்மா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அதே மாதிரி ரெனேவையும் உங்களுக்கு பிடிக்கும். அடுத்த நடிக்க போகும் படங்களையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றும் கூறி நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகப்பெரிய நன்றி என கண்கலங்கி கொண்டே பேசினார் துஷாரா.

Advertisement