வயது வித்யாசம் பார்க்காமல் அட்ஜஸ்ட்மெட் டார்ச்சர் – ஈரமான ரோஜாவே மாமியார் வேதனை.

0
3046
- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகை மீனா வெகுரி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

தற்போது சீரியலில் காவியா கர்ப்பதால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்று அடம் பிடித்து காவியா சென்றதால் கர்ப்பம் கலைந்துவிடுகிறது. இதனால் காவியா மனம் உடைந்து விடுகிறார். இந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் தவிக்கிறார். வீட்டில் எல்லோருமே காவியா சந்தோஷமாக இருப்பதை எண்ணி கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டை விட்டு தனி குடுத்தனம் செல்ல ப்ரியா நினைக்கிறார். அதற்கு ஜீவா மறுக்கிறார். இறுதியில் பிரியா வீட்டை விட்டு வரவில்லை என்றால் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார்.

இனி ஜீவா பிரியாவுடன் தனிக்குடித்தனம் செல்வாரா? விவாகரத்து கொடுப்பாரா? காவியா கர்ப்பம் கலைந்த விஷயம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வருமா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் காவியா, பிரியாவிற்கு மாமியாராக நடிப்பவர் மீனா வெகுரி. இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்த சீரியலுக்கு முன்பே சன் டிவி, ஜீ தமிழ் என பிறமொழிச் சேனல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

எனக்கு கோபமே வராது :

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மீனா வெகுரி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். அதற்கு காரணம் என்னுடைய கதாபாத்திரம்தான்.அதற்கு இயக்குனர் தான் காரணம். நான் ஒன்றும் செய்ய முடியாது. நிஜத்தில் என்னுடைய மாமியார் ரொம்ப குழந்தை மாதிரி. ஈரமான ரோஜாவே செட்டில் ரொம்ப ஜாலியாக இருக்கும். எல்லோரும் என்னை ஓட்டுவார்கள். நான் எல்லாத்தையும் ஜாலியாக தான் எடுத்துக் கொள்வேன். எனக்கு கோபமே வராது.

வாழ்க்கையில் தான் கஷ்டங்கள் :

நான் பெரிதாக எதற்கும் கோபம் கொள்ள மாட்டேன். நான் ரொம்ப குழந்தைத்தனமானவள். அதுமட்டுமில்லாமல் நான் ஜாலியாக குழந்தை மாறி விளையாடிக் கொண்டிருப்பேன். அதேபோல் நான் துரை ரீதியாக எந்த ஒரு கஷ்டமும் படவில்லை. வாழ்க்கையில் தான் கஷ்டங்கள் பட்டிருக்கிறேன். மீடியாக்கள் வந்த பிறகு எந்த இடத்தில் புள்ளி வைக்கணும், எப்போ இயல்பாக இருக்கணும், எதற்கு பதில் தரணும் என்பதெல்லாம் தெரிந்து கொண்டேன். அதோடு இந்த மீடியாவிற்கு நான் வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் :

யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டதில்லை. ஆனால், தொலைபேசியில் சில அழைப்புகள் வரும்.
அவர்கள் ஆரம்பிக்கும் முன்பு நான் முடியாது என்று சொல்லி விடுவேன். மேலும், காலை 7 மணிக்கு ஷூட்டிங் போகணும். ஒரு நாள் முழுவதும் சூட்டில்லாமல் உட்காரவும் வைத்திடுவார்கள். அதிகபட்சம் ஒரு மணி நேரம் தூங்கலாம் அதற்கு மேல் உட்கார்ந்தது தான் இருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு கூப்பிட்டு ஒரு சாட் எடுப்பார்கள். அப்பவும் அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா என்றெல்லாம் உதவி இயக்குனிடம் கேட்டேன். இரவு 9 மணிக்கு தான் முடித்து அனுப்புவார்கள். இது ஒன்றுதான் எனக்கு கஷ்டம். ஆனால், இது தினமும் இருக்கும். இப்போது எல்லாம் பழகி விட்டது. யாரையும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்கே சூட்டிங் எப்போது முடியும் என்று தெரியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement