நாளை முதல் டாஸ்மாக்கில் நுழைவு கட்டணம்..!எவ்வளவு தெரியுமா..!குடிமகன்கள் ஷாக்..!

0
1508
tasmac
- Advertisement -

தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் எந்த துறையில் இருந்து வருமானம் வருகிறதோ இல்லையோ டாஸ்மார்க் துறையில் இருந்து குறைவில்லாமல் வ்ருமானம் வந்து கொண்டு தான் இருக்கிறது. சொல்லப்போனால் தமிழக அரசின் பாதி வருமானம் இந்த துறையில் இருந்து தான் வருகிறது.

-விளம்பரம்-

அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால்,  நாளை முதல் இதை விற்பனை செய்ய முடியாது. இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பார்களில் நாளை முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் 10 ரூபாய் முதல் 20  ரூபாய் வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் 10 ரூபாய் வசூலிப்பதே மது பிரியர்கள் கண்டித்து வருகின்றனர். தற்போது இந்த நுழைவு கட்டணமும் அவர்களுக்கு மேலும் ஒரு தொல்லையாக அமைந்துள்ளது. நாட்டின் குடி மகன்களின் சாபம் சும்மாவிடாது.

Advertisement