பிறந்த உடன் என் கண்ணில் கூட காட்டவில்லை, என் மகன் பிழைக்க மாட்டான்னு சொன்னாங்க – எதிர் நீச்சல் கனிகா மகனுக்கு நேர்ந்த சோகம்.

0
854
kanika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனிகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

-விளம்பரம்-

நடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு வயதில் இருந்து நன்றாக பாடும் திறமை இவரிடம் இருந்தது. இதனால் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்காக இவரை பாட அழைத்திருந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக இவரை நோக்கி பட வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். தற்போது இவரது மகனுக்கு 9 வயது ஆகிறது.இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே அம்மணி யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். தற்போது இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியல்களின் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கனிகா, தனது மகன் பிறந்த போது அவனுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். அதில் பேசிய அவர் ‘நான் கர்ப்பமாக இருந்த போது எல்லா பெண்களைப் போல நானும் நலமாக தான் இருந்தேன் கர்ப்ப காலத்தில் வரும் அனைத்து அறிகுறிகளும் எனக்கும் இருந்தது. எதுவும் பிரச்சனை இல்லை என்று எனக்கு பிரசவம் நடைபெற்றது. ஆனால், என் மகன் பிறந்த பின்னர் அவனை எண் கண்ணில் கூட காட்டவில்லை.

பின்னர் மருத்துவர் என்னிடம் வந்து ஒரு புகைப்படத்தை காட்டி உங்கள் மகனுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று சொன்னார். அப்போது நான் நடந்தே சென்று அவசர சிகிச்சையில் இருந்த என்னுடைய மகனை பார்த்தேன். ஒரு வாரங்கள் அவனை அவசர சிகிச்சையிலேயே வைத்து இருந்தார்கள். இப்படியே இருந்தால் ஒன்றும் நடக்காது என்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அவனுக்கு அறுவை சிகிச்சை நடந்த போது என் கணவர் மட்டும் தான் மருத்துவமனையில் இருந்தார். நான் ஆண்டவனை பிரார்த்திக்க கோவிலுக்கு சென்று விட்டேன் ஏழு மணி நேரம் நான் கோவிலில் அவனுக்காக பிரார்த்தனை செய்தேன் பின்னர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்து உயிர் பிழைத்தான் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்’

Advertisement