பெண்ணிடம் இதனால் தான் நம்பர் கொடுத்தேன் – உண்மையை போட்டுடைத்த எதிர் நீச்சல் மாரிமுத்து.

0
1178
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் எதிர்நீச்சல் மாரிமுத்து இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது “எதிர் நீச்சல்” தொடர் மூலம் தான்.

-விளம்பரம்-

வைரலான மாரிமுத்து மீம்ஸ் :

மாரிமுத்து ஒரு பேட்டியில் கூட “எதிர் நீச்சல்” சீரியலில் வில்லனாக நடிப்பதினால் சீரியலை விட்டு வெளியில் நிஜ வாழ்கையிலும் அதோ போல என்னை பார்த்தால் திட்டுகின்றனர். வெளியில் சென்றால் கூட என்னுடைய எதிரில் வந்தால் இந்த வழி வேண்டாம் என்று வேறு வழியில் சென்று விடுகின்றனர். அதனை பாரத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மேலும் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் எண்ணுகிறேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ‘இந்தாம் ஏய்’ என்ற மாரிமுத்துவின் Templeteகள் பல வைரலானது. இதன் மூலம் சமூக வலைத்தளத்திலும் trending மீம் மெட்டிரியலானார் மாரிமுத்து.

- Advertisement -

மாரிமுத்து ட்விட் குறித்து அவரது மகன் :

இப்படி ஒரு ஒரு நிலையில் இவர் சமூக வளைத்ததில் கேலிக்கு உள்ளாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 18+ ட்விட்டர் பக்கம் ஒன்றில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்று போட்டு ‘can i call you’ என்று குறிப்பிடபிபட்டு இருந்தது. இந்த பதிவிற்கு கீழ் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து Yes என்று பதிவிட்டு ஒரு போன் நம்பரும் போடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பார்த்த பலரும் சீரியலில் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான நபராக இருந்துவிட்டு இப்படி ட்விட்டரில் வழிந்துகொண்டு இருக்கிறார் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

மேலும், இது மாரிமுத்துவின் போன் நம்பர் தான் என்றும் true callerல் இந்த நம்பரை போட்டு ஆதாரத்தை எல்லாம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாரிமுத்து மகன் அகிலன் ‘அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும் அதனால் அதனை யாரோ தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர்’ என்றும் கூறி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த சர்ச்சை குறித்து மாரிமுத்து :

இந்த நிலையில் தான் “எதிர்நீச்சல்” சீரியல் மாரிமுத்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தற்போது நடந்தது வரும் சர்ச்சை குறித்து கேட்க “ஒரு பெண் நம்பர் கேட்டால் கொடுப்பதில் என்ன தப்பு என்று கூறினார் மாரிமுத்து. மேலும் உங்களை பூமர் என்று சில கூறுகிறார்களே என கேட்டதற்கு பூமர் என்றால் என்ன? “நான் சாமி கும்பிட மாட்டேன், கோவிலுக்கு போக மாட்டேன், சம்பரதாயம் பாக்கமாட்டேன். எப்போதும் 20 வருடங்கள் முன்னோக்கி தான் இருப்பேன்.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

மத்தவங்க எல்லோரும் அரைகுறை நாயிங்க. இவனுங்களுக்கு நான் பூமராகத்தான் தெரிவேன். நான் ஜப்பானில் பிறந்திருக்க வேண்டியவன் தப்பி தவறி தமிழ் நாட்டில் பிறந்துவிட்டேன் என்றும் அதனை கட் செய்யாமல் அப்படியே சோசியல் மீடியாவில் போடுமாறு தைரியமாக கூறினார் மாரிமுத்து. இந்த வீடியோ வைரலாக நிலையில் நெட்டிசன்கள் பலரும் “இவர் கோவிலுக்கு போகமாட்டார், சாமி கும்பிட மாட்டார், பின்னர் எதற்கு நெற்றியில் அந்த பொட்டு என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement