4 நாள் சாப்பிடல,பேதியாகி மயங்கியே விழுந்துட்டேன் – சினிமாவில் Ags பட்டுள்ள கஷ்டங்கள். அவரே சொன்ன உருக்கமான விஷயம்.

0
696
marimuthu
- Advertisement -

நான்கு நாட்கள் சாப்பிடாமல் மயங்கி விழுந்து விட்டேன் என்று எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையை மையமாக கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து அவர்களை அதிகம் வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இப்படி பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

மாரிமுத்து திரைப்பயணம்:

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா, மணிரத்தினம் போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் மாரிமுத்து அவர்கள் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

மாரிமுத்து குறித்த தகவல்:

அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார். தற்போது மாரிமுத்து சன் டிவியில் மிகப்பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் உதவியாளராக பணியாற்றிய போது ஒரு மேன்ஷனில் தங்கி இருந்தேன். அப்போது என்னிடம் காசு இல்லை. என் நண்பர்கள் தான் எனக்கு உதவினார்கள். ஒரு முறை தீபாவளி பண்டிகையின் போது நண்பர்கள் அனைவரும் ஊருக்கு சென்று விட்டார்கள்.

marimuthu

மாரிமுத்து அளித்த பேட்டி:

அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலும் விடுமுறை விட்டு விட்டார்கள். இதனால் சாப்பாடு இல்லாமல் தவித்து இருந்தேன். மூன்று நாட்கள் சாப்பிடாமல் வெறும் ஊறுகாயை சாப்பிட்டு தண்ணீர் மட்டும் குடித்தேன். இதனால் நான்காவது நாள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். இதை அறிந்த வீட்டு பக்கத்தில் இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு குளுகோஸ் ஏற்றிய பிறகுதான் எனக்கு சுயநினைவு வந்தது என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

Advertisement