அந்த சீரியல்ல SACக்கு முன்னாடி நான் தான் நடிக்க வேண்டியது – ராதிகா கூப்பிட்டும் நான் போகல. அதுக்கு காரணம்.

0
1843
- Advertisement -

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை எதிர்ரீச்சல் மாரிமுத்து இழந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. தற்போது இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் மாரிமுத்து அவர்கள் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார்.

மாரிமுத்து அளித்த பேட்டி:

தற்போது மாரிமுத்து ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து வந்தாலும், சன் டிவியில் மிகப்பிரபலமான எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விஜய் டிவி வாய்ப்பு குறித்து சொன்னது, வேற சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால், இப்போதைக்கு எதிர்நீச்சல் சீரியல் முடியும் வரை வேற சீரியல் பண்ண முடியாது. காரணம், டப்பிங் பேசவே நைட் ஒரு மணிக்கு ஒரு மணி ஆகிவிடுகிறது. இந்த சீரியல் 1500 எபிசோடு வரைக்கும் போகும் என்று சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

கிழக்கு வாசல் சீரியல் குறித்து சொன்னது:

நிச்சயம் ரொம்ப வருஷம் இந்த சீரியல் போகும். அதனால்தான் பிற சீரியலில் நடிக்க மறுத்தேன். ஆனால், விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் பண்ண எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மாதிரியான கதை. இந்த சீரியலில் விசு கதாபாத்திரம் மாதிரி என்று சொல்லி என்னை ஜெயிலர் சூட்டிங்கில் இருக்கும்போது நேரடியாகவே ராதிகா மேடமே போன் செய்து கேட்டார்கள். அந்த சீரியல் பண்ண முடியாது என்ற சூழல் வந்து விட்டது.

கிழக்கு வாசல் சீரியல்:

அதுவும் பெரிய கேரக்டர் தான். அதற்கு பிறகு தான் அந்த கதாபாத்திரத்தை எஸ் ஏ சந்திரசேகர் சாரிடம் சென்றிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர், வெங்கட் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Advertisement