சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.
View this post on InstagramA post shared by Priyadharshini (@priyadharshinikishoreneelakndn)
இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.மேலும், திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.
View this post on InstagramA post shared by Priyadharshini (@priyadharshinikishoreneelakndn)
அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பல பிற்போக்கு வசனங்கள் இருந்ததால் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி நடித்து வருகிறார். . தமிழ் திரையுலகில் 'தாவணிக் கனவுகள், இதய கோயில்' மற்றும் மலையாளத்தில் 'சுப யாத்ரா' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்திருந்தார் ப்ரியதர்ஷினி. இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் 'கல்கி' என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி.

தற்போது இவர் எதிர் நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவரது கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் அரை டவுசரில் சில புகைப்படங்களை வெளியிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் 'இந்தாம்மா ஏய் என்ன இதெல்லாம்' என்று எதிர் நீச்சல் மாரிமுத்து ஸ்டைலில் கலாய்த்து வருகின்றனர்.






