எதிர்நீச்சல் சக்தக்கு கல்யாணம்ஆகிடுச்சா? அவரின் மனைவியை பார்த்துளீர்களா?

0
235
- Advertisement -

காதலர் தினத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் சக்தியின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி கடத்தல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

தர்ஷினியை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். தர்ஷினி காணவில்லை என்று அவருடைய அம்மா, சித்திமார்கள் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன், விசாலாட்சி இருவரும் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதே ஈஸ்வரி தான். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் கதிர், ஞானம் இருவரும் அவர் அண்ணனுக்கு எதிராகவே பேசுகிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்காத குணசேகரன், கதிர்- ஞானம் இருவரையும் திட்டுகிறார்.

சீரியல் கதை:

பின் போலீஸ் ஜீவானந்தத்தை கைது செய்கிறது. அதற்கு பின் பெண்கள் நான்கு பேரையும் போலீஸ் கைது செய்து அடித்து கொடுமைப்படுத்திகிறார்கள். ஜீவானந்தம்- ஈஸ்வரி இருவரும் தர்ஷினியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஜெயிலில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார்கள். இனி வரும் நாட்களில் ஜீவானந்தம்- ஈஸ்வரி தப்பித்தார்களா? உண்மையிலேயே தர்ஷனியை கடத்தி வைத்திருப்பது யார்? குணசேகரின் திட்டம் என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சபரி பிரசாந்த்.

-விளம்பரம்-

சக்தி சபரி குறித்த தகவல்:

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் இவரின் கதாபாத்திரம் நெகட்டிவாக இருந்தாலும் தற்போது பாசிட்டிவாக சென்று கொண்டிருப்பதால் பலரும் சக்தி கதாபாத்திரத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இவருடைய மனைவியின் பெயர் கிருத்திகா. இவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்து பல போராட்டங்களுக்கு பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

சக்தி மனைவி பதிவு:

இவருடைய மனைவி ஐடியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சபரி பிரசாத்தின் மனைவி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று இன்ஸ்டாலில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், நாங்கள் காதலிக்கும் போது காதலர் தினம் கொண்டாடியது கிடையாது. இப்போது நாங்கள் காதலர் தினத்தன்று கல்யாணம் செய்து கொண்டதாலோ என்னவோ காதலர் தினத்தை கொண்டாடவே இல்லை. இது எங்களுடைய இரண்டாவது கல்யாண நாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Advertisement