பசி,சமோசாவில் மலர்ந்த காதல் – எதிர் நீச்சல் சத்யப்பிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளர் களா ?

0
1238
sathyapriya
- Advertisement -

இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சத்யபிரியா. நடிகை சத்யப்ரியா 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சத்யப்ரியா.1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா.

-விளம்பரம்-

அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் சத்யப்ரியா. படங்களில் வாய்ப்புகள் குறைந்த்து அடுத்து தொடர்த்து சீரியலில் களமிறங்கினார்.

- Advertisement -

வெளிநாட்டு மணமகள் :

இந்நிலையில் நடிகை சத்யபிரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சினிமா வாழ்கை, வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது என பல அனுபவங்களை பகிந்து கொண்டார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சத்திய பிரியா தன்னுடைய மருமகள் அமெரிக்காவை சேர்ந்தவர் என்று கூறினார். பின்னர் அவரது மகனும் மருமகளும் அந்த பேட்டியில் கலந்து கொண்டனர்.

காதல் கதை :

சத்யபிரியாவின் மகன் தனக்கு எப்படி திருமணமானது என்பதை பற்றிய சுவாரசியமான ஒரு தகவலை கூறினார். அதாவது சத்யபிரியா மகன் பேசுகையில் “நான் அமெரிக்காவை உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய மனைவி நியூஜெர்சியை சேர்ந்தவர். இப்படி இருக்கும் போது ஒரு நாள் ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு அதிகமான பசி எடுத்தது.

-விளம்பரம்-

சமோசாவால் வந்த காதல் :

அப்போது என்னுடைய மனைவி ஒரு இந்திய சமோசாவை கையில் வைத்திருந்தார். அந்த நேரம் நான் அவரிடம் சென்று இந்த சமோசாவை தயவு செய்து கொடுத்து விடுங்கள் நான் உங்களுக்கு கேடின்னின் வேறு உணவு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன். அப்படிதான் நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டோம் எங்களின் அந்த ரயில் பயணம் 2 மணிநேரம் தொடர்ந்தது. அதில் பல விஷியங்களை பற்றி பகிர்ந்து கொண்டோம்.

சில காலங்கள் நண்பர்களாக இருந்தோம் பின்னர் ஒருவருக்கொருவர் பிடித்து விட்டது. எனவே காதல் செய்ய ஆரம்பித்தோம், என்னுடைய அம்மாவிடம் காதல் பற்றி சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டு எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று கூறினார் சத்யபிரியா மகன். இந்நிலையில் பலவிதமான விஷியங்களினால் காதல் மலர்ந்த கதையை கேட்டிருப்போம் ஆனால் ஒரு சமோசாவால் காதல் மலர்ந்தது என்ற கதையை இப்போதுதான் கேட்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement