-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘என் ரோலுக்கு முக்கியத்துவமே இல்ல’ – பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய நடிகர்.

0
4280
Ethirneechal

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் திடீரென விலகி இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

-விளம்பரம்-

தற்போது சீரியலில் அனைவரும் அருண்-ஆதிரைக்கு தான் திருமணம் ஆகும் என்று பல எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. பின் அருண்- கரிகாலனுக்கு ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணத்தை பதிவு செய்ய குணசேகரன் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இன்னொரு பக்கம் அருண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய நபர்:

இதை அறிந்து ஜனனி ஹாஸ்பிடலுக்கு சென்று அருணை பார்க்கிறார். அங்கு எஸ் கே ஆர், சாருபாலா ஆகியோர் ஜனனியிடம் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள். இருந்தாலும், ஜனனி எப்படியாவது ஆதிரைய காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? என பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விலகிய காரணம்:

அதாவது, எதிர்நீச்சல் சீரியலில் எஸ்கேஆர் இன் கடைசி தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் மது கார்த்திக். இவர்தான் தற்போது சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகிறது. இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் தான் சீரியல் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இவருடைய கதாபாத்திரம் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு பதில் இந்த சீரியலில் யார் நடிக்கப் போகிறார்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news