அடியாட்களுடன் வீட்டில் புகுந்த கதிர், அப்பா என அழுத ஜீவானந்தத்தின் மகள், அதிர்ச்சியில் உறைந்த ஜனனி – பரபரப்பின் உச்சத்தில் எதிர் நீச்சல் சீரியல்.

0
2549
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று எங்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மேலும், இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம், ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் அதிக பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தான் தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். மேலும், ஜீவானந்தத்தை பழிவாங்க, குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

-விளம்பரம்-

குணசேகரன் திட்டம்:

இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவானந்தம் மனைவி, மகளை பார்ப்பதற்கு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். இங்கு வீட்டில் குணசேகரன், அப்பத்தாவிடம் கத்தி புலம்புகிறார். ஆடிட்டர் வக்கீல் வீட்டிற்கு வந்து சொத்து விவரம் குறித்து அப்பத்தாவிடம் கேட்கிறார்கள். ஆனால், அப்பத்தா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இந்த நிலையில் இன்றைக்கான எபிசோடு குறித்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

ப்ரோமோ குறித்த தகவல் :

அதில், ஜீவானந்தம் வீட்டிற்குள் கதிர், வளவனின் ரவுடி கும்பல் நுழைந்து வெட்டப் போகிறார்கள். இதை பார்த்து ஜனனி தடுக்க போகிறார். அப்போது அரிவாள் வெட்டு யார் மீது விழுந்தது என்று தெரியவில்லை. அதிர்ச்சியில் நிற்கிறார் ஜனனி. இன்னொரு பக்கம் அப்பத்தா, ஜீவானந்தம் எனக்காக தான் இப்படி எல்லாம் செய்தார் என்று வாயை திறந்து பேசுகிறார். இனி வரும் எபிசோடுகளில் ஜீவானந்தத்தை ரவுடி கும்பல் கொலை செய்து விட்டார்களா? அப்பத்தா ஏன் சொத்தை ஜீவானந்தம் பெயரில் மாற்றினார்? இதற்கு குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement