அட, ஜீவானந்தத்திற்கும் ஈஸ்வரிக்கும் இப்படி ஒரு தொடர்பா ? எதிர்நீச்சல் சீரியலில் இத நோட் பன்னீங்களா ?

0
2273
- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத எதிர்நீச்சல் சீரியலின் புதிய ட்விஸ்ட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.

சீரியலின் கதை:

பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருமே தங்கள் பக்கம் நியாயத்தை எதிர்த்து தட்டிக் கேட்கிறார்கள். இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பட்டமாவின் சொத்தை தன் பெயரில் முழுவதுமாக மாற்றும் வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். மேலும், சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்று வக்கீல் குணசேகரிடம் சொல்கிறார்.

-விளம்பரம்-

ஜீவானந்தம்-குணசேகரன் சண்டை:

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் கம்பெனிக்கு செல்கிறார்கள். ஆபீஸில் குணசேகரன் ஆட்களும் ஜீவானந்தமும் ஆட்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின் கடைசியில் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று ஜனனி, குணசேகரன் கேட்கிறார்கள். அப்போது குணசேகரன் தேவையில்லாமல் அநாவசியமாக பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் துப்பாக்கியில் சுடுகிறார். இதனால் அனைவருமே அமைதியாக நிற்கிறார்கள். இனி இந்த சொத்து ஜீவானந்தத்திற்கு சொந்தமானதா? ஜீவானந்தம் எதற்கு பட்டமாவின் சொத்தை அபகரிக்கிறார்? இதனால் குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? ஜனனிக்கு ஜீவானந்தம் உதவி செய்வாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

ஜீவானந்தம் குறித்த தகவல்:

இந்த நிலையில் ஜீவானந்தத்தை குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதி குணசேகரின் மனைவி ஈஸ்வரி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் அவரை காதலிப்பார். அவர் சமூக சேவை செய்து கொண்டு இருப்பார். அந்த நபர் ஈஸ்வரி தந்தையிடமே பேசுகிறார். ஆனால், அவர் திட்டி அனுப்பிவிட்டு ஆதி குணசேகரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஒருவேளை அந்த நபர் தான் ஜீவானந்தமாக இருக்குமோ? அவர் தோழராக இருப்பதற்கான அத்தனை அறிகுறியும் தெரிகிறது. இது தெரியாமல் ஈஸ்வரி, குணசேகரன் ஆளாக ஜீவானந்தம் இருப்பார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும், ரசிகர்கள் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்

Advertisement