அம்மாவிற்கு புற்று நோய், வெட்டி எடுக்கப்பட்ட மார்பகங்கள் – எதிர் நீச்சல் சீரியல் நடிகை பகிர்ந்த சோகம்

0
775
- Advertisement -

பொதுவாகவே சினிமாவுலகில் சில நடிகர், நடிகைகள் சில படங்கள் நடித்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் கனிகா. இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைத்துறையின் மீது ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும் பொழுது பாட்டு பாடுதல், நாடகம் போன்றவைகளில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியை பங்கு பெற்று வெற்றி பெற்றார்.

-விளம்பரம்-

இதனால் இவர் திரைத்துறைக்கு வர காரணமாக இருந்தது. திரைபயணம் மற்றும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவரின் இனிய குரலுக்கு சரியான தமிழ் உச்சரிக்கும் திறமையினால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபோது பின்னணி குரல் கொடுத்து நடித்தார். மேலும், இவர் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

கனிகா குறித்த தகவல்:

மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டும் ஆவார். தற்போதைய இவர் சின்னத்திரை சீரியல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான்.

எதிர்நீச்சல் சீரியல்:

வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் குறித்து தகவல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். தற்போது சீரியலில் ஈஸ்வரி தேர்தலில் தன் கணவனை எதிர்த்து போட்டி போடுகிறார். இன்னொரு பக்கம் ஆதிரை தன்னுடைய காதலனுக்கு செய்த கொடுமைக்காக அவருடைய வீட்டிற்கு சென்று விடுகிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரி தேர்தலில் வெற்றி பெறுவாரா? குணசேகரனின் திட்டம் என்ன? ஆதிரை- அருண் திருமண நடக்குமா? போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

அம்மா குறித்து சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கனிகா அளித்த பேட்டியில், புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி என்னுடைய அம்மா நிறைய சொல்வார். ஆனால், அவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது. அவருக்கு மார்பில் வலி இருப்பதாக என்னிடம் சொன்னார். உடனே மருத்துவமனைக்கு சென்றோம். ஹீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை போன்ற பல சிகிச்சை கொடுக்கப்பட்டது. புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது அம்மா பட்ட வேதனைகளை நேரில் இருந்து பார்த்தேன். அவருடைய மார்பகத்தை பாதுகாப்பு காரணமாக வெட்டி எடுத்தார்கள். அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாகவே இருந்தது.

Advertisement