இந்த கிறுக்கு பையனுக்குள்ளையும் மனசு இருக்கு ஆதிரா – ஒரே வசனத்தில் ரசிகர்களை அழ வைத்த கரிகாலன்.

0
1953
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பது குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வரும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் திருச்செல்வம், ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் நிறுத்திக் வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் அநியாயங்களை பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். பின் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு சென்ற பிறகு வலது பெற்று கை செயலிழந்து விட்டது.

-விளம்பரம்-

கரிகாலன்-ஆதிரை காட்சிகள்:

ஆனால், இது எல்லாம் குணசேகரன் ஏமாற்று வேலை. பின் அவர் ஜீவானந்தத்தை பழிவாங்க அவருடைய தம்பி கதிருடன் சேர்ந்து சென்னைக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் போலீசாக இருக்கும் ரவுடி வளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கரிகாலன்-ஆதிரை காட்சிகளும் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று எபிசோட் டில் ஆதிரை அருணை சந்திக்க செல்கிறார். அருண், ஆதிரை என்ற ஒருத்தி என்னுடைய வாழ்க்கையிலே இல்லை என்று சொல்லி சென்று விடுகிறார்.

ரசிகர்கள் மீம்ஸ்:

இதனால் மணமடைந்த வீட்டுக்கு வந்த ஆதிரை என்னால் கரிகாலனுடன் வாழ முடியாது என்று சொன்னவுடன் கரிகாலன் தேம்பித் தேம்பி ஆதிரடியிடம் கதறி அழுகிறார். பின் எனக்கு நேரம் கொடு, உன்னை எனக்கு பிடிக்கும். என் அன்பு புரியும் என்று பயங்கர எமோஷனலாக பேசுகிறார். பார்ப்போரையே கண்கலங்க வைக்கும் அளவிற்கு கரிகாலன் நடிப்பு இருந்தது. தற்போது இது தொடர்பான புகைப்படத்தை தான் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே குணசேகரன் ஞானத்தை திட்டி பேசிய போது ஞானம் பயங்கரமாக கதறி கதறி அழுவார். அந்த எபிசோடும் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி எதிர்நீச்சல் சீரியலில் எமோஷனல் காட்சிக்கு ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement