ஆபத்தான நிலையில் அப்பத்தா, குணசேகரன் சூழ்ச்சி, சோகத்தில் மொத்த குடும்பம் -பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்

0
446
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ்.என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து பிரச்சனை செய்து விடுகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மாரிமுத்து மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி என்ட்ரி ஆகியிருந்தார். முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்தது அதிரடியாக இருந்தது. பின் இவர் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். பின் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இயக்குனர் கிருஷ்ணா மெய்யப்பன் என்ற புது வில்லனை அறிமுகம் செய்திருக்கிறார். பின் கடந்த வாரம் எபிசோடில் அப்பத்தா விழாவை ஏற்பாடு செய்து தான் ஆரம்பிக்கும் புதிய டிரஸ்ட் குறித்து பேசுகிறார். அதற்கு பொறுப்பாளராக ஜீவானந்தத்தை நியமிக்கிறார்.

திருவிழாவில் நடந்தது:

இதையெல்லாம் பார்த்து குணசேகரனும், கதிரும் கடுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கௌதம், கதிர்- குணசேகரனை கொல்ல துப்பாக்கியில் குறி வைத்து இருக்கிறார். அப்பத்தா, ஜீவானந்ததிற்கு பரிசு கொடுக்க குணசேகரனை மேடைக்கு அழைக்கிறார். குணசேகரன்- ஜீவானந்தமும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது கௌதம் குணசேகரன் மீது குறி வைக்கிறார். துப்பாக்கி சூடும் சத்தமும் கேட்கிறது. ஆனால், கௌதம் சுட்டது குணசேகரன் வைத்த ஆளை தான்.

-விளம்பரம்-

அப்பத்தா நிலைமை:

துப்பாக்கி சூட்டில் இடமே கலவரம் ஆகிவிட்டது. கௌதம் எப்படியோ அங்கிருந்து தப்பித்து சென்று விடுகிறார். வழக்கம்போல் வீட்டில் உள்ள எல்லோருமே இந்த கொலைக்கும் ஜனனி, அப்பத்தாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றெல்லாம் திட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அப்பதான் திடீர்னு மயங்கி விழுகிறார். எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது குணசேகரன், ஞானம், கதிர் மட்டும் அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு அழைக்க செல்கிறேன் என்று செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

ஆனால், அப்பத்தாவை எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. வீட்டு பெண்களும், ஜனனி, சக்தி ஆகியோரும் ஹாஸ்பிடலில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பத்தாவுக்கு என்ன ஆனது? என்று தெரியவில்லை. இனி வரும் நாட்களில் குணசேகரன் திட்டமிட்டபடி அப்பத்தாவை கொன்றாரா? அப்பத்தாவிற்கு என்ன ஆனது? ஜீவானந்தம் காப்பாற்றுவாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement