இருக்குறது பத்தாதுனு ஜனனிக்கு வந்த புது வில்லன் – பரபரப்பை நோக்கி எதிர்நீச்சல் சீரியல்

0
618
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் புது வில்லன் என்ட்ரி குறித்த தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார்.

குணசேகரன்- ஈஸ்வரி தேர்தல்:

பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இதனால் மொத்த வீடுமே சோகத்தில் இருக்கின்றது. இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். சக்தி- ஜனனி இருவரும் அப்பத்தாவின் கேசை நடத்த சாருபாலாவிடம் கேட்கிறார்கள். அவரும் ஒத்து கொள்கிறார். பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள்.

-விளம்பரம்-

குணசேகரன் சூழ்ச்சி:

இன்னொரு பக்கம் வீட்டில் ஆதிரை தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி போட்டு அருண் வீட்டிற்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் கரிகாலன், ஜான்சிராணி இருவருமே தீ கொளுத்தி கொள்வோம் என்று சொல்கிறார்கள். உடனே குணசேகரன் என்னுடைய மகள் தர்ஷினியை உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன், இது சத்தியம் என்று சொல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் வீட்டின் பெண்கள் எல்லோரும் மஅதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், தாரா கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் குணசேகரன், விசாலாட்சி இருவருமே அதிர்ந்து போய் இருக்கிறார்கள். பின் குணசேகரின் வீட்டிற்கு ஒரு புது நபர் வருகிறார். அவர், நான் தான் ஜனனி எதிரி என்று சொல்கிறார். இவர் யார்? இவருக்கும் ஜனனிக்கும் என்ன பிரச்சனை? ஐயப்பன் கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்களா? என்ற பல எதிர்பார்ப்புகளுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement