தேர்தலில் நிற்கும் ஈஸ்வரி, குணசேகரனுக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி. பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்.

0
225
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் கடந்த வாரம் எபிசோடில் அப்பத்தா விழாவை ஏற்பாடு செய்து தான் ஆரம்பிக்கும் புதிய டிரஸ்ட் குறித்து பேசினார். இதன் பொறுப்பாளராக ஜீவானந்தத்தை நியமித்தார். இதையெல்லாம் பார்த்து குணசேகரனும், கதிரும் கடுப்பாகி விட்டார்கள்.

அப்பத்தா நிலைமை:

பின் அப்பத்தா திடீர்னு மயங்கி விழுகிறார். எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது குணசேகரன், ஞானம், கதிர் மட்டும் அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு அழைக்க செல்கிறேன் என்று செல்கிறார்கள். விபத்தில் அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இதனால் மொத்த வீடுமே சோகத்தில் இருக்கின்றது. இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். இதை ஆதங்கத்துடன் ஈஸ்வரி வீட்டில் சொல்கிறார். கோபமடைந்த ஞானமும், அவருடைய அம்மாவும் கொந்தளித்து ஈஸ்வரியை திட்டுகிறார்கள். ஆத்திரம் தாங்க முடியாமல் ஈஸ்வரி, உங்கள் மகன்கள் தான் இரண்டு கொலை செய்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள பெண்களும் கதறி அழுது உண்மையை சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

தேர்தலில் ஈஸ்வரி:

அடுத்த நாள் ஈஸ்வரிக்கு கல்லூரியில் இருந்து வேலை செய்வதற்கான ஆர்டர் கிடைக்கிறது. அதை வாங்கி படித்து குணசேகரன் கிழித்து விட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று சொல்கிறார். ஆனால், அதையும் மீறி ஈஸ்வரி கல்லூரிக்கு செல்கிறார். பின் கல்லூரிக்கு குணசேகரன் சென்று வகுப்பறையில் ஈஸ்வரியை குறித்து அவதூறாக பேசுகிறார். இதனால் ஈஸ்வரியை வேலை விட்டு நிறுத்துகிறார்கள். அடுத்து என்ன பண்ணப் போகிறோம் என்று ஆதங்கத்தில் பெண்கள் எல்லாரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சக்தி- ஜனனி இருவரும் அப்பத்தாவின் கேசை நடத்த சாருபாலாவிடம் கேட்கிறார்கள். அவரும் ஒத்து கொள்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் எஸ் கே ஆர் தன்னுடைய மனைவி சாருபாலாவை நிற்க வைக்கிறார். இதை அறிந்த குணசேகரன் ஈஸ்வரியை நிற்க வைக்கிறார். முதலில் ஈஸ்வரி மறுத்தாலும் ஜனனி சொன்னதால் ஈஸ்வரி நிற்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், சாருபாலா நான் தான் அப்பத்தா கேஸை நடத்துகிறேன் என்று குணசேகரன் எனக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அதுக்கு ஜனனி தெரியும் போது தெரியட்டும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம், அப்பத்தா கேசிற்கும் ஜீவானந்தத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்து விட்டால் உங்களுடைய மகன் குணசேகரன் எங்களுடைய வழியில் குறுக்கிட கூடாது என்று ஜனனி அவருடைய மாமியாரிடம் முறையிடுகிறார். குணசேகரன் எதுவும் பேசாமல் இருக்கிறார். போலீசும் வீட்டிற்கு வருகிறது. இனிவரும் நாட்களில் ஜீவானந்தம் மீது எந்த தப்பும் இல்லை என்பதை ஜனனி நிருபிப்பாரா? தேர்தலில் ஈஸ்வரி வெற்றி பெறுவாரா? குணசேகரனின் நிலைமை என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement