குணசேரன் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது இதற்காக தானா? இவ்ளோ கொடூரமானவரா?

0
186
Ethirnechal
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி கடத்தல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

தன் தந்தை குத்து சண்டை விளையாட்டுக்கு போகக்கூடாது என்று சொன்னவுடன் சோகத்தில் தர்ஷினி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். தர்ஷினி காணவில்லை என்று அவருடைய அம்மா, சித்திமார்கள் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரன், விசாலாட்சி இருவரும் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதே ஈஸ்வரி தான். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்று வழக்கம்போல் ஈஸ்வரி மற்றும் மற்ற பெண்களை தான் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் கதை:

யாரும் எதிர்பாராத வகையில் கதிர், ஞானம் இருவரும் அவர் அண்ணனுக்கு எதிராகவே பேசுகிறார்கள். இதனால் ஆத்திரம் தாங்காத குணசேகரன், கதிர்- ஞானம் இருவரையும் திட்டுகிறார். பின் போலீஸ் ஜீவானந்தத்தை கைது செய்கிறது. அதற்கு பின் பெண்கள் நான்கு பேரையும் போலீஸ் கைது செய்து அடித்து கொடுமைப்படுத்திகிறார்கள். இதை எல்லாம் பார்த்து கதிர், ஞானம், சக்தி மனம் உடைந்து புகாரை வாபஸ் வாங்க சொல்லி குணசேகரனிடம் முறையிடுகிறார்கள். ஆனால், குணசேகரன் முடியாது என்று சண்டை போடுகிறார்.

-விளம்பரம்-

நேற்றைய எபிசோடு:

மேலும், நீதிமன்றத்தில் எல்லா பெண்களும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு வீடியோ வருகிறது. அதில் தர்ஷினி, என் அம்மா தான் என்னை கடத்த சொன்னார் என்று சொல்கிறார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ஈஸ்வரி, நான் தான் கடத்தினேன். இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மற்ற பெண்களை காப்பாற்றி விடுகிறார். பின் ஜெயிலில் ஜீவானந்தம் தப்பித்து விடுகிறார். இந்த வழக்கை உயர் அதிகாரி கொற்றவை இடம் செல்கிறது.

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் தான் தன் மகளை கடத்தி வைத்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. தர்ஷினிக்கு போதை ஊசி போட்டு கொடுமைப்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கரிகாலன் -ஜான்சி இடம் குணசேகரன், கண்டிப்பாக நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என்று சொல்கிறார். இதனால் குணசேகரன் சொன்னது போல் கரிகாலனுக்கும் தர்ஷினிக்கும் திருமணம் செய்து வைப்பாரா? குணசேகரன் தான் தன் மகளை கடத்தி வைத்திருக்கும் உண்மை வெளிய வருமா? தர்ஷினியை காப்பாற்றுவார்களா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement