கடந்தபட்ட தர்ஷினி, கரிகாலனுக்கு விழுந்த அடி, ஜனனி தங்கையின் காதல் – பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல் சீரியல்.

0
218
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில வாரங்களாகவே சீரியலில் தேர்தல் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதை அறிந்து குணசேகரன் கோபப்பட்டு அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார். பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள். மேலும், கடந்த வாரம் எபிசோட்டில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன், மெய்யப்பன் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இதனால் ஜனனி உடைந்து போய் விடுகிறார். சொத்துக்காக நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்தை வேண்டாம் என்று மெய்யப்பன் குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறார்.

ஜனனி அப்பா செய்த வேலை:

இதனால் ஜனனியின் அம்மா உடைந்து போய் விடுகிறார். பின் நாச்சியப்பனின் சகோதரர்கள் ஜனனியின் அம்மாவிடம் தாலியையும், இந்த குடும்பத்திற்கு சம்பந்தமில்லை என்று கோயில் சத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவரும் ஒத்து கொள்கிறார். மேலும்,நேற்று நடந்த எபிசோடில் ஜனனி அம்மா கோவிலில் சத்தியம் செய்து தன்னுடைய தாலியை கழட்டி கொடுத்து நாச்சியப்பனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுகிறார்.

-விளம்பரம்-

ஜனனி குடும்பத்தின் நிலை:

நாச்சியப்பனும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இன்னொரு பக்கம் ஜனனி சகோதரி, மெய்யப்பன் குடும்பத்தில் இருக்கும் நபரை காதலிக்கிற விஷயம் ஜனனி அம்மாவிற்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ந்து போய் விடுகிறார். ஆனால், அந்த பையன், நான் உண்மையாக காதலிக்கிறேன். எங்கள் வீட்டில் அனுமதி வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து செல்கிறார். என்ன நடக்கும் என்று புரியாமல் சென்னையின் அம்மா தவிக்கிறார். இன்னொரு பக்கம் தர்ஷினியை குத்து சண்டை விளையாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று அவருடைய அப்பா சொன்னதால் மனம் உடைந்து தர்ஷினி ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மர்ம நபர்கள் யாரோ அவரை கடத்தி விடுகிறார்கள். பின் தர்ஷினியை காணவில்லை என்று ஈஸ்வரி, நந்தினி, ஜனனி எல்லோருமே தேடிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல் குணசேகரன் கத்திக்கொண்டு இருக்கிறார். இனி வரும் நாட்களில் தர்ஷனியை கடத்தியது யார்? குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? ஜனனி சகோதரனின் திருமணம் நடைபெறுமா? நாச்சியப்பன் இப்படி செய்வதற்கு என்ன காரணம்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement