நடிகை கே ஆர் விஜயா அம்மா வேறு யாரும் இல்லை – எதிர் நீச்சல் விசாலாட்சி சொன்ன உண்மை.

0
6244
- Advertisement -

எதிர்நீச்சல் நடிகை சத்யப்பிரியாவிற்கும், நடிகை கேஆர் விஜயாவிற்கும் இடையே உள்ள உறவு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சத்யபிரியா. இவர் 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் சத்யப்ரியா.

-விளம்பரம்-

மேலும், 1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா. அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரிலும் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அந்த வகையில் இவர் அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

சத்யப்ரியா திரைப்பயணம்:

மேலும், படங்களில் வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் சீரியலில் களமிறங்கினார். இது வரையில் இவர் பல சீரியலில்களில் நடித்து விட்டார். அதில் முக்கியமான சீரியல் என்றால் இயக்குனர் திருச்செலவம் இயக்கிய கோலங்கள் தான். இது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சத்யப்ரியா நடித்து வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை.

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு வரவேற்பு, எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதிர் நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், இந்த தொடரில் குணசேகரனுக்கு அம்மாவாக விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்திய பிரியா.

-விளம்பரம்-

சீரியலில் சத்யப்ரியா:

இந்த சீரியலில் இவர் முதலில் வில்லியாக தான் நடித்திருந்தார். தற்போது இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை சத்யபிரியா மற்றும் கே ஆர் விஜயா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாக இருக்கிறது. அதாவது, சமீபத்தில் இவர் நடிகை கே ஆர் விஜயாவை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை தான் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்து, நீண்ட நாட்களுக்கு பிறகு கே ஆர் விஜயா அம்மாவை சந்தித்தேன்.

கே ஆர் விஜயா குறித்து சொன்னது:

அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சந்தோசமாக இருக்கிறார். அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கே.ஆர். விஜயா எனக்கு வேறு யாரும் இல்லை என்னுடைய நெருங்கிய தோழியின் அக்கா தான். கே ஆர் விஜயா அம்மாவின் தங்கை ஆர் வத்சலாவால் தான் அவரை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு என்னுடைய தோழிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement