எதிர் நீச்சல் குணசேகரனுக்கு கிடைக்காத சிறந்த வில்லன் விருது – யாருக்கு கிடைச்சிருக்கு பாருங்க – ரசிகர்கள் அப்சட்

0
2584
Ags
- Advertisement -

எதிர்நீச்சல் குணசேகரனுக்கு சிறந்த வில்லன் விருது கிடைக்காதது குறித்து நெட்டிசன்கள் திட்டி வரும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது . பொதுவாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பல வருடங்களாக சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சமீப காலமாக சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் டாப்பில் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது புதிது புதிதாக சீரியல்களும், நிகழ்ச்சிகளும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் சீரியல் நடிகர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் சன் குடும்ப விருதுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான சன் குடும்ப விருதுகளும் நடைபெற்றது. தற்போது அதற்கான சூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

சிறந்த வில்லன் விருது:

இந்த நிலையில் சன் டிவியின் சிறந்த வில்லனுக்கான விருது குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் போட்ட ஓட்டு அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சிறந்த வில்லனுக்கான விருது எதிர்நீச்சல் சீரியல் நடிகர் குணசேகரனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கயல் சீரியல் நடிகர் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப்படுகிறது.

ரசிகர்கள் வருத்தம்:

தற்போது அதற்கான புகைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலருமே குணசேகரனுக்கு தான் நியாயப்படி கிடைக்க வேண்டும். அவர்தான் இந்த விருந்திற்கு தகுதியானவர். எங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சன் டிவி இப்படி ஏமாற்றக்கூடாது. சிறந்த வில்லனுக்கான விருது இப்படி கிடைக்கும் என்று நினைக்கவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை என்று வருத்தத்தில் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதோடு குணசேகரன் வேற யாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து தான்.

-விளம்பரம்-

மாரிமுத்து குறித்த தகவல்:

இவர் ரசிகர்கள் மத்தியில் குணசேகரன் ஆகவே வாழ்ந்து வருகிறார். ஏன் இந்தம்மா என்ற வார்த்தையின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் கவர்ந்திருக்கிறார். இந்த எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

சீரியலின் கதை:

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. தற்போது சீரியலில் ஆதிரை- அருண் திருமணத்தை நடத்த ஜனனி மற்றும் வீட்டில் உள்ள மற்ற மருமகள் திட்டம் தீட்டுகிறார்கள். இதில் குணசேகரன் வெற்றி பெறுவாரா? ஜனனி இதில் பெறுவாரா? என்ற பல அதிரடித் திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

Advertisement