இப்படி எல்லாம் சீரியலில் காட்சிகள் வைப்பதா?சூப்பர் ஹிட் சன் டிவி சீரியலை விளாசும் ரசிகர்கள்- என்னன்னு நீங்களே பாருங்க

0
3355
- Advertisement -

சூப்பர் ஹிட் ஆக செல்லும் எதிர்நீச்சல் சீரியலை தற்போது நெட்டிசன்கள் விளாசி வரும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடுக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அருண் குணசேகரனுக்கு எதிரியான எஸ் கே ஆர் இன் தம்பி. இதனால் குணசேகரன் அவர்கள் ஆதிரை- அருண் கல்யாணத்தை நடத்தக்கூடாது என்ற திட்டம் போடுகிறார்.

சீரியலின் கதை:

ஆனால், ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சீரியலில் முதலிரவு காட்சி குறித்த விமர்சனம்:

அதாவது, இந்த வாரம் சீரியலில் ஆதரிக்கும்- கரிகாலனுக்கும் முதலிரவு நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். இந்த காட்சியை தான் விமர்சிக்கிறார்கள். காரணம், இந்த சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பலருமே பார்க்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த முதலிரவு காட்சியில் கரிகாலன் தன்னுடைய உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் காட்டுகிறார். என்னதான் ஆதிரையின் மீது இவருக்கு காதல், பாசம் இருந்தாலும் இப்படி எல்லாம் அத்துமீறி பேசி நடந்து கொள்ள வேண்டுமா?
அதோடு முதலிரவு காட்சியில் அதிரையிடம் கரிகாலன் நடந்து கொண்டதை குறித்து பலரும் திட்டியும் வருகின்றனர்.

திட்டிதீர்க்கும் ரசிகர்கள்:

அது மட்டுமில்லாமல் முதல் இரவு அறைக்குள் ஜான்சி ராணி அடாவடியாக நுழைந்து சாராயத்தை எடுப்பது, நீ இன்னும் ஆரம்பிக்கலையா? என்று அவர் பேசுவதெல்லாம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. பின் ஜான்சி ராணி குணசேகரனுக்கு போன் செய்து முதலிரவுக்கு உன் தங்கை சம்மதம் தெரிவிக்கவில்லை என்று மிரட்டும் வகையில் பேசி இருக்கிறார். ஒரு மாமியார் இப்படி எல்லாம் நடந்து கொள்வதா? இப்படி முதலிரவு காட்சி குறித்து இவர்கள் பேசும் வசனமும் செய்கைகளும் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. இது குறித்து தான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement