எதிர் நீச்சல் சீரியல் நந்தினிக்கு சொந்தமான குரல் யாருடையது தெரியுமா ? அவரே சொன்ன விஷயம்.

0
1156
Haripriya
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினிக்கு குரல் கொடுக்கும் பிரபலம் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ஹரிப்பிரியா. சொல்லப்போனால், இவரை இசை என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியமானவள் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் ஹரிப்ரியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தவர்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம். மேலும், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஹரிப்ரியா குடும்பம் பற்றிய தகவல்:

இதனிடையே நடிகை ஹரிப்ரியா 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின் திடீரென்று விவாகரத்து செய்வதாக இவர்கள் இருவருமே அறிவித்து இருந்தார்கள். பிரிவிற்கு பிறகு ஹரிப்ரியா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தொகுப்பாளர், நடிகை என பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல்;

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. ஜீவானந்தம் முழுவதும் சொத்தை தன் பேரில் மாற்றிக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் ஜீவானந்தத்தைக் கொள்ள திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா கண் விழித்து ஜீவானந்தம் எந்த தவறும் செய்யவில்லை.

-விளம்பரம்-

சீரியலில் நந்தினி ரோல்:

எனக்காக தான் செய்கிறார் என்று கூறியும் ஜீவானந்தத்தை போட்டு தள்ள குணசேகரன் முடிவு செய்கிறார். ஜீவானந்தத்தை தேடி ஜனனி செல்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் அப்பாவி குணம் கொண்ட நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா நடித்து கொண்டு வருகிறார். நந்தினி ரோல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ரீச் கிடைத்திருக்கிறது. இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

நந்தினி டப்பிங் குரல்:

இவர் சீரியலில் கேண்டினுக்கு உணவு சமைத்து தரும் தொழிலை செய்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கதாபாத்திரம் வலுவடைந்து கொண்டு செல்கிறது. இது ஒரு பக்கம் இருக்க ஹரிப்ரியா அடிக்கடி instagram பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவார். அந்த வகையில் தற்போது இவர், நிறைய பேருக்கு நந்தினிக்கு குரல் கொடுப்பது யார்? என்று கேட்டிருக்கிறார்கள். அது என்னுடைய குரல் தான். எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன் என்று கூறி நந்தினி கதாபாத்திரத்துக்காக டப்பிங் பேசும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement