என்னது எதிர் நீச்சல் சக்திக்கு திருமணம் ஆகிடிச்சா. இதோ அவரின் திருமண புகைப்படங்கள்.

0
1227
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் சக்தியின் திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று எங்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக ஜனனி வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் சொத்தை மீட்க திட்டம் போட்டார். அப்போது ஜீவானந்தம் மனைவியை சுட்டு விடுகிறார்கள். இதை பார்த்து ஜனனி அதிர்ச்சி ஆகிறார். மேலும், கண்விழித்த அப்பத்தா ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். அதேசமயம் ஜீவானந்தத்துடன் பட்டம்மாள் பாட்டி கிளம்பி விடுகிறார். இருவரும் சொத்தை குணசேகரனுக்கு கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சக்தி குறித்த தகவல்:

இதற்கு வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே உறுதுணையாக இருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் குணசேகரன் ஈஸ்வரியை தண்டிப்பாரா? ஈஸ்வரியின் நிலைமை என்ன? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது. மேலும், இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சபரி பிரசாந்த். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவருடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக சென்று கொண்டிருப்பதால் பலரும் சக்தி கதாபாத்திரத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

சக்தி திருமண புகைப்படம்:

இந்நிலையில் நடிகர் சக்தி சபரியின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் சக்தி சபரியின் மனைவி பெயர் கார்த்திகா. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து காதலித்து வந்தார்கள். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய திருமண புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலருமே உங்களுடைய ஜோடி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்று கூறி வருகிறார்கள்

Advertisement