முதல் படமே தோல்வி, 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வந்த பகத் பாசில்(காரணம் இது தான்)

0
1852
- Advertisement -

முதல் பட தோல்வி தொடங்கி பிரபலமான நடிகராக பகத் பாசில் மாறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பகத் பாஸில். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் வேற யாரும் இல்லை, இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் பாசில் அவர்கள் தமிழில் பிரபலமான இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, விஜய் நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் பகத் பாஸிலின் சகோதரர் ஃபர்கான் பாசிலும் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பகத் பாசில் திரைப்பயணம்:

மேலும், நடிகர் பகத் அவர்கள் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமாகியிருந்தார். அதன் பின் மலையாளத்தில் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், தெலுங்கு மொழியில் வெளிவந்த புஸ்பா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்தது.

பகத் பாசில்-நஸ்ரியா திருமணம்:

உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பு மிரள வைத்து இருந்தது என்றே சொல்லலாம். இதனிடையே பகத் பாஸில் அவர்கள் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியாவும் தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர். தற்போது பகத் பாஸின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

முதல் படம் தோல்வி:

மேலும், இந்த படத்தின் மூலம் பகத் அவர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்த நிலையில் பகத் பாசிலின் நடிப்பு குறித்து பலரும் விமர்சித்து இருந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பகத்தின் தந்தை பிரபலமான இயக்குனர் என்பதால் அவருக்கு முதல் பட வாய்ப்பு சுலபமாக அமைந்தது. இவர் தன்னுடைய 20 வயதில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் வெளியான கையெத்தும் தூரத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2002ஆம் ஆண்டு வெளி வந்திருந்தது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

சினிமாவில் சாதித்த பகத்:

மேலும், இவருடைய நடிப்பு குறித்து பலருமே விமர்சித்து பதிவிட்டு இருந்தார்கள். இதனால் பகத் பாஸில் மிகவும் மனமடைந்து விட்டார். பின் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பகத் பாஸில் நடிப்பை கற்றுக்கொண்டு கேரள கஃபே படத்தில் மீண்டும் நடிக்க களமிறங்கினார். அந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்ட பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது மாமன்னன் படத்தில் பகத் பாஸில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.

Advertisement