தமிழகே பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டிருந்த பிகில் படம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 25) வெளியாகி திரையரங்குகளில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . மேலும், விஜய் ரசிகர்கள் பயங்கர ஆர்பாட்டத்திலும், உற்சாகத்திலும் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் தான் பிகில் படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. மேலும், வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இதிலிருந்தே பிகில் படம் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று பலரும் அடித்து கூறினர்.
அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்ய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் நேற்று பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து உலகமே கலைகட்டியது. நேற்று பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
விஜயின் பிகில் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் திரையுலக பயணத்திலேயே பெரிய பட்ஜெட்டில் தயாரான படம் என்று பார்த்தால் அது பிகில் படம் தான். இந்த பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது. மேலும், ரசிகர்கள் பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்ட பிகில் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பிகில் படத்தைப் பார்த்து ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமா உலகில் ஒளிப்பதிவாளராக இருக்கும் சந்தோஷ் சிவன் அவர்கள் அண்மையில் தான் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்த்துள்ளார். மேலும், அதில் விஜய் அவர்கள் பேசியதை தற்போதுதான் கேட்டுள்ளார்.
விஜய் பேசியதை கேட்டு சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, விஜய் சார் உங்கள் ‘பேச்சும், படமும் சூப்பர்’ என்றும் “துப்பாக்கி 2” படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் விஜய்யின் “துப்பாக்கி 2” படம் வரும் என எதிர்பார்ப்புகளுடனும், நம்பிக்கையிலும் உள்ளார்கள். விஜய் துப்பாக்கி 2 படம் எடுக்கப்படுமா இல்லையா என்று பின்பு தான் தெரியும் எனவும் தெரிவித்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிகில் படம் தமிழகத்தில் மட்டும் வெளியிடாமல் உலகில் பல நாடுகளில் பிரம்மாண்ட அளவில் சரவெடி போல் பட்டையை கிளப்பி இருக்கிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பிகில் படத்தை பார்த்து சந்தோஷமாக உற்சாகத்தில் உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.