ஒருத்தர நம்பி இந்த ஷோ கிடையாது, பூச்சாண்டிலாம் காட்டாதீங்க, போறதுன்னு போங்க – வெளுத்து வாங்கிய அர்ஜுன்.

0
10195
survivor
- Advertisement -

ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பிரேட்டிற்காக புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரே நேரத்தில் பிரபலமான மூன்று சேனல்களில் உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது, இதில் தமிழில் மட்டும்தான் தொடர்ந்து கமல் தொகுப்பாளராக இருந்து வருகிறார், இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் தொகுப்பாளராக ஆக்சன் கிங் அர்ஜுன் களம் இறங்கி இருந்தது இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

- Advertisement -

சர்வ இவர் நிகழ்ச்சி ஒன்றும் புதிதான ஒரு நிகழ்ச்சி கிடையாது. ஏற்கனவே இது பல்வேறு வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சிதான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு இது மிகவும் புதுமையான ஒரு நிகழ்ச்சியாக தான் இருந்தது. அதேபோல இந்த நிகழ்ச்சியில் வரும் டாஸ்க்குகள் பிக் பாஸுக்கே போட்டி கொடுக்கும் விதமாக தான் இருக்கிறது.

அதிலும், கடந்த சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ஜுன் போட்டியாளர்களை வறுத்து எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்காடர்கள் அணியில் இருந்த சரண் செல்போனை பயன்படுத்தி இருந்தார். இதுகுறித்த அவரிடம் அர்ஜுன் பேசிய போது ‘உங்களுக்கு அறிவு இல்லையா’ என்று கடும் கோபத்துடன் திட்டினார்.

-விளம்பரம்-

அதேபோல சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுங்கள் என்று சரணை மீண்டும் வறுத்தெடுத்து இருந்தார். சமீபத்தில் வெளியாகி இருந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்த அர்ஜுன், நீங்கள் பேசும் போதெல்லாம் கேமரா வைத்தால் எனக்கு பிரைவசி வேண்டும் என்று சொல்கிறீர்களாமே.

பிரைவசி வேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே, நீங்கள் பாத்ரூம் போவது மட்டும்தான் இந்த நிகழ்ச்சியில் பிரைவசி என்று வறுத்தெடுத்த உள்ளார் அர்ஜுன். இப்படி ஓர் நிலையில் அர்ஜுனை போல கமல், பிக் பாஸை தொகுத்து வழங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் ட்ரைபல் பஞ்சாயத்தில் கலந்து கொண்ட காடர்கள் அணியில் ஐஸ்வர்யா மற்றும் சரண் பேசி கொண்டு இருந்தனர். அப்போது குறுக்கிட்டு கேள்வி கேட்ட அர்ஜுனிடம், சரண் கேம விட்டு வெளியே போரேன்னு சொன்னான் என்று ஐஸ்வர்யா கூறினார். உடனே கடுப்பான அர்ஜுன் சரணை வெளுத்து வாங்கினார்.

This image has an empty alt attribute; its file name is 1-106.jpg

ஒருத்தரை நம்பி இந்த ஷோ கிடையாது சரண், நாங்க போயிடறோம்னு இங்க பூச்சாண்டி கீச்சாண்டிலாம் எதுவும் கிடையாது. உங்களுக்கு வெளியேறனும்னு நெனெச்சா நீங்க வால்க் அவுட் பண்ணிட்டு போங்க என்று செம டென்சன் ஆகியுள்ளார் ஆக்ஷன் கிங். இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் பலரும் பிக் பாசை விட அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை செமையாக தொகுத்து வழங்குகிறார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement